Monday, November 1, 2010

MAHABHARATH - DARMAR PLAYS DICE

PRAISE YOUR MOTHER TONGUE - SPEAK IN MOTHER TONGUE - PRAY IN MOTHER TONGUE


தாத்தா: இன்றைக்கு தர்மர் சூதாடிய கதையைப் பார்ப்போம்.
சூர்யா: சூதாடுதல் தப்பு இல்லையா தாத்தா.  காம்ப்ளிங் கூடாது என்று எல்லோரும் சொல்லுவார்களே.  கிரிக்கட்லே கூட இப்போ காம்ப்ளிங் இருக்கு தாத்தா.
தாத்தா: திருவள்ளுவரே இதை மிகவும் கண்டித்து பல குறள்களைச் சொல்-யுள்ளார்.  தருமருக்கும் இது தெரியும். மட்டைப்பந்து விளையாட்டில் சூதாடினாலும் அது கேவலம் தான். புரியுதா?  சரி கதைக்கு வருவோம்.  இந்திரப்பிரத்தம் வந்த நூற்றுவர்களும் அந்த புதிய மண்டபம் . தருமர் நடத்திய மகாமகம்  அதாவது பெருவேள்வி - எல்லா அரசர்களும் வந்து அதை சிறப்பித்தமை கண்டு மனம் குமுறினார்கள்.  ஊர் திரும்பியதும் துரியோதனன் தன் மந்திராலோசனையை நடத்த ஆரம்பித்தான். கெடுவான் கேடு நினைப்பான்.  மாமா சகுனி, நண்பன் வள்ளல் கன்னன் ஆகியோர் பங்கு பெற்றனர்.
சூர்யா: கர்ணன் மட்டும் தானா அந்தக் காலத்தில் புகழ் பெற்ற வள்ளல்?
தாத்தா: அந்த காலத்திலேயே ஏழு வள்ளல்கள் என்று சிறப்பு பெற்றவர்கள் கன்னன் தவிர அக்குரூரன், அந்திமான், அரிச்சந்திரன், சந்திமான், சிசுபாலன், தந்தவக்கிரன் ஆகியோர். 'இனி, அவன், சில் நாள் செல்லின், எம்மனோர்                           வாழ்வும் கொள்ளும்;  துனை வரும் புரவித் திண் தேர்த் துணைவரும் சூரர் ஆனார்;  முனை வரு கூர் முள் வேலை முளையிலே களையின் அல்லால்,  நனி வர வயிர்த்தபோது நவியமும் மடியும் அன்றே'.  ஐவரின் புகழை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று துரியோதனன் தனது கருத்தைச் சொன்னான்.  அதை அவன் தம்பி துச்சாதனன் வ-யுறுத்தினான். "நந்தகோபன் மகனுக்குத் தானே முதல் மரியாதை செய்தார்கள் இந்த ஐவர் குழுவினர்.  அரசர்கள் எல்லாம் வாய் திறக்காமல் நிற்க எதிர்த்துக் கேள்வி கேட்ட சிசுபாலனையும் கொன்று ஒழித்தார்களே?". 'தன் புய வலியும், நான்கு தம்பியர் வலியும், மாயன்
வன் புய வலியும், கொண்டே, மண் எலாம் கவர எண்ணி,
இன் புயச் சிகரி மன்னர் யாரையும் தன் கீழ் ஆக்கி,
மின் புயல் அனையான் மேன்மை விளைக்கவே, வேள்வி செய்தான்.' இந்த தருமன் என்று பொறாமைப்பட்டார்கள் நூற்றுவர் தலைவர்கள்.  உடனே துரியோதன் இந்த ஐவர் எழுச்சியை நாம் வஞ்சனை கொண்டே அடக்க வேண்டும் என்று கூறி தக்க உபாயங்கள் கூறுமாறு அûவியல் இருந்தவர்களைக் கேட்டான்.  ஆனால் கன்னனோ போர் வழியே யன்றி வஞ்சனை வழி ஆகாது என மறுத்து உரைத்தான்.  ஆனால் சகுனியோ மாயச் சூதினாலே ஐவரை அடக்கி ஒடுக்க வேண்டும் எனத் தன் எண்ணத்தைச் சொன்னான்.  வீரத்தால் வெல்ல முடியாது என்பதை விளக்கிய சகுனி ஏற்கனவே பாஞ்சா- திருமணத்தின் போது கன்னன் தோற்றதை நினைவூட்டினார். 'இப் பிறப்பு ஒழிய, இன்னும் ஏழ் எழு பிறப்பினாலும்,
மெய்ப்பு இறப்பு அற்ற நீதித் தருமனை வெல்ல மாட்டோம்;
ஒப்பு அறப் பணைத்த தோளாய்! உபாயம் எங்கேனும் ஒன்றால்,
தப்பு அறச் சூது கொண்டு சதிப்பதே கருமம்' என்றான்  சகுனி.  துச்சாதனன் சகுனியின் சூது உபாயத்திற்கு உடனே உடன்படுகிறான்.  போரிட ஐவர் அஞ்சார்.  எனவே சூதிலே வெல்வோம் என்று தம்பி துச்சாதனனும் வழிமொழிந்தான்.  உடனே வஞ்சக சகுனி தன் திட்டத்தை விரிவாகச் சொன்னான்.  அவர்கள் மண்டபம் கட்டியதைப் போல் துரியோதனனும் ஒரு மண்டபத்தைக் கட்டி ஐவரை அதைப் பார்க்க வரும்படி அழைக்க வேண்டும் எனவும் அப்போது சூதாட அழைத்து அவர்களைத் தோற்கடிக்கலாம் என்றும் திட்டத்தை வெளியிட்டான் சகுனி.   ஆனால் சிற்றப்பன் விதுரன் இந்த திட்டத்தை எதிர்த்தான்.  " உங்களுக்கு அந்த அரசு வேண்டும் என்றால் உங்கள் தந்தையிடம் சொல்லுங்கள்.  உங்கள் தந்தை கட்டளையிட்டால் உடனே அவர்கள் அரசை உங்களுக்கு ஒப்படைத்துவிட்டு வெளியேறிவிடுவார்கள் என்றார் அவர். 
வையமும் அரசும் வாழ்வும் வாங்குகை கருத்தே ஆயின்,
பொய் அடர் சூதுகொண்டு, புன்மையின் கவர வேண்டா;
ஐய! நின் தந்தை ஓலை ஐவருக்கு எழுதி விட்டால்,
மெய்யுற மறுத்துச் சொல்லார்; வேண்டின தருவர் அன்றே.
'தீதினால் வரித்து, நெஞ்சம் தீயவர் ஆடும் மாயச்
சூதினால் வென்று கொள்கை தோற்றமும் புகழும் அன்று;
போதில் நான்முகனும், மாலும், புரி சடையவனும், கேள்வி
ஆதி நான்மறையும், உள்ள அளவும், இவ் வசை அறாதே!'
உலகம் உள்ளவரை இந்த பழி நீங்காது எனத் தன் கருத்தை வெளியிட்ட விதுரனின் பேச்சை கேட்கவில்லை துரியோதனன்.  மாறாகச் சினம் கொண்டான். "நீங்களும் உங்கள் குடும்பமும் உணவு உண்ணுவது எங்கள் வீட்டில்.  ஆனால் ஐவர் பக்கம் சார்ந்தே எப்போதும் பேசுகிறார்கள் என்றான். உனக்கும் உன் கிளைக்கும், நாளும், உண்டியும் வாழ்வும் இங்கே; மனக் கருத்து அங்கே'  என்று குத்திக் காட்டிôன்.  விதுரனும் தனது நீதியை எடுத்துச் சொன்னான்.  ஐவரும் நூற்றுவரும் ஒன்றுபட்டால் உலகில் யாரும் அவர்களை எதிர்க்க முடியாது என்றும் தங்களுக்குள் சண்டையிட்டால் குருகுலம் அழியும் என்பதை முன்கூட்டியே தெரிவித்தவர் இந்த விதுரரே., மண்டபம் ஒன்று அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  திட்டமிட்டபடி கட்டி முடிக்கப்பட்ட உடன் தந்தையிடம் சென்று மண்டபத் திறப்பு விழாவிற்கு ஐவரை அழைக்கும்படி கூறினான் துரியோதனன்.  திருதராட்டிரன் விதுரனையே போய் அழைத்து வரும்படி கூறுகிறார்.  விதுரருக்குத் தான் தெரியுமே இவர்கள் திட்டம் என்ன என்று.  ஆனால் அண்ணனின் ஆணையை ஏற்றுச் சென்றார்.  தருமரிடம் விடயத்தைக் கூறினார் விதுரர். திருதராட்டிரனின் திருமுகச் செய்தியைப் படித்ததும் தம்பிகளின் கருத்தைக் கேட்டார் தருமர்.  வீமன் அழுத்தம்திருத்தமாகச் சொன்னான். "அண்ணா - இவர்கள் முதலில் கங்கை நீரில் வேல் நட்டு என்னைக் கொல்லப் பார்த்தார்கள்.  தப்பித்தேன்.  அடுத்து உணவிலே நஞ்சு கலந்து என்னை கங்கையில் வீசினான்.  பிழைத்தேன்.  பின்னர் காசியில் அரக்கு மாளிகை கட்டி நம்மை அங்கு வைத்து உயிரோடு கொழுத்தப் பார்த்தான்.  நாம் அனைவரும் ஒருவழியாகத் தப்பித்தோம்.  அப்போது இந்த விதுரர் நமக்குத் துணை புரிந்தார்.  இப்போதும் இவர் செய்தி கொண்டு வந்தாரே தவிர போகலாம் என்று சம்மதத்தைத் தரவில்லை.  எனவே நாம் போக வேண்டாம்'' என்று தன் கருத்தைச் சொன்னான்.  வில்லவனும் நகுலனும் சகாதேவனும் இதேகருத்தை வழிமொழிந்தார்கள்.  ஆனால் விதியின் விளையாட்டு நிற்குமா?  விதி நகைத்தது.  தருமர் போய் ஆகவேண்டும் என்று முடிவெடுத்தார்.  ஐவரும் திரௌபதியும் அத்தினாபுரி நோக்கி படைகளுடன் சென்றனர்.  அத்தினாபுரி சென்ற ஐவரும் திருதராட்டிரன், வீடுமன், காந்தாரி, விதுரன் ஆகியோரை வணங்கி விதுரன் இல்லத்திலேயே தங்கினர்.  மறுநாள் காலையில் துரௌபதியை காந்தாரியின் அரண்மனையில் விட்டுவிட்டு அரசவைக்குச் சென்றனர் ஐவர்.  அங்கே துரியோதனன் தருமனைச் சூதாடத் தூண்டுகிறான்.  மறுக்கிறான் தருமன்.  சகுனி ஆசை வார்த்தைகள் சொல்- தருமனைத் திசை திருப்புகிறான்.  மவுனம் சாதிக்கிறான் தருமன்.  மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பதைப் புரிந்து கொண்ட சகுனி மகிழ்ச்சியடைகிறான்.  கன்னனும் வீரம் பேசி சூதாடுமாறு கூறுகிறான்.  விசயன் வெகுண்டு எழுகிறான்.  தருமன் விசயனை அடக்குகிறான்.  பின்னர் தருமன் சூதாட ஒப்புக் கொள்கிறான்.  தருமனும் சகுனியும் சூதாடுகிறார்கள்.  பணயத் தொகையை திருதராட்டிரன் தருகிறான்.  தருமன் எல்லா செல்வத்தையும் இழக்கிறான். பாண்டிவர்களையே பணயமாக வைத்து விளையாடத் தூண்டுகிறான் துரியோதனன்.  இதிலும் தோற்கிறான் தருமன்.  பின்னர் சகுனி திரௌபதியைப் பணையமாக வைக்கத் தூண்டுகிறான்.  இப்போது இடைமறிக்கிறான் விதுரன்.  திருதராட்டிரனை நோக்கி, "அண்ணா - இதை நீங்கள் தடுக்க வேண்டும்.  இல்லாவிடில் விளைவுகள் விபரீதமாகும்.  நாங்கள் உங்களை நம்பி இருப்பது அறிவிலாமை போல உள்ளது'' என்று முறையிடுகிறான். 
'திருகு நெஞ்சின் வஞ்சர் ஆகி, இளைஞர் தீமை செய்தகால்
உருகுகின்ற தாதை நீ உடன்படுத்து இருப்பதோ?
மிருகம் அன்று; பறவை அன்று; இரக்கம் இன்றி மேவு நின்
அருகு வந்து அணைந்தது, எங்கள் அறிவிலாமை ஆகுமே!
இவ்வளவு நடந்தும் தருமர் கலங்கவில்லை.  எப்போதும் போல் அமைதியாக இருந்தார். நன்மையையும் தீமையையும் ஒன்று போல் ஏற்றுக் கொள்ள ஆன்ம பக்குவம் அவரிடம் இருந்தது. "நெஞ்சு அசைந்திலான், அசஞ்சலன்.''  என்கிறார் வில்-யார்.  அவையோர் இந்த நிகழ்ச்சிகளைக் கண்டு புலம்புகிறார்கள்.  மாமன் சகுனி மருமகன்கள் நூற்றுவரைக் கொல்ல அல்லவோ வழிகாட்டுகிறான் என்று கருதுகிறார்கள்.'மருமகன் உயிருக்கு இந்த மாமனோ மறலி!' என்பார்.  மற- என்றால் எமன் என்று பொருள். 'தருமன் இத்தனை நாள் செய்த தருமமும்  பொய்யோ?' என்று மனம் புழுங்கினர்.'அழியுமே இவனால், மைந்தர் அரும் பெருஞ்  செல்வம்' என்பார்; 'வழிவழியாக  நிற்கும்  வசை,  இவன்  புரிந்தது!'.  இடைமறித்து அறிவுரை கூறிய வீடுமனை நோக்கி தகாத வார்த்தைகளைக் கூறினான் துரியோதனன்.  வீடுமனுக்கு நடக்கப்போவது தெரியும்.  எனவே அதற்கு மேல் அவர் வற்புறுத்தவில்லை.  விதுரனிடம் தருமனது அனைத்துச் செல்வத்தையும் கவர்ந்து தன்னிடம் ஒப்படைக்கும்படியும் அவர்களின் துகிலைக் களைந்துவிடும்படியும் கட்டளையிட்டான் துரியோதனன். "தொல்லை மா நகரும், நாடும், தோரணம் நாட்டச் சொற்றி;  எல்லை இல் நிதிகள் எல்லாம் இம்பரே எடுக்கச் சொற்றி;  நல் எழில் மடவார் தம்மை நம் பதி எய்தச் சொற்றி;  சொல்லிய இளைஞர் தாமும் தொண்டினராகச் சொற்றி'' என்று கட்டளையிடுகிறான் துரியோதனன்.  விதுரன் தடுத்து தனது நீதிமொழிகளைக் கூறுகிறான்.
சூர்யா: இந்த விதுரர் எப்போதும் நீதிமொழி சொல்-க்கொண்டே இருக்கிறாரே தாத்தா&
தாத்தா: விதுரநீதி என்று ஒரு நூலே உள்ளது.  மிகத் தெளிவாக நாம் வாழ வேண்டிய முறைகளை நமக்கு எடுத்துச் சொல்லும் நூல் அது.  நேரம் கிடைக்கும் போது பின்னால் உனக்கு நான் அதைச் சொல்கிறேன்.  இப்பொழுது கதைக்கு வருவோம். "திறம் தரு செல்வம் யாவும் தீமையின் கவர்தல் உற்றாய்; மறம் தரு வலியும் அன்று; மணம் தரு வாழ்வும் அன்று; நிறம் தரு புகழும் அன்று; நெறி தரு மதியும் அன்றே.'' என்று கூறி கண்ணன் அவதாரம் எடுத்து இந்த மண்ணுலகம் வந்த காரணத்தை எடுத்துரைக்கிறான்.  பூமியின் பாரத்தை நீக்கவே கண்ணன் அவதாரம் எடுத்திருக்கிறான்.  நீங்கள் உங்களுக்குள் சண்டையிட்டால் ஒரு போர் மூழும்.  அதனால் பலபேர் மடிய நேரிடும்.  பூமிபாரம் நீங்கள் வழிவகுக்கிறீர்கள் என்று சொல்கிறான்.  விதி முந்துறும்.  விதுரன் மொழி எடுபடுமா? விதுரனைத் துரியோதனன் நகையாடி அவமதிக்கிறான்.  அருகில் நின்ற பிராதிகாமி என்பவனை அழைத்து திரௌபதியை அழைத்துவரப் பணிக்கிறான்.  அவனோ திரௌபதியிடம் செல்ல அஞ்சி செல்வது போல் வெளியேறி ஒரு கற்பனைக் கதையுடன் திரும்ப வந்து தன்னை இழந்தபின் தருமர் என்னைப் பணயம் வைத்தாரா? அல்லது என்னைப் பணயம் வைத்தபின் தன்னை இழந்தாரா? என்று திரௌபதி கேட்டதாகக் கூறுகிறான்.
'என்னைத் தோற்று, மனு நெறி கூர் இசையோன்
               தன்னைத் தோற்றனனோ?
தன்னைத் தோற்று, தனது மனத் தளர்வால்,
               என்னைத் தோற்றனனோ?
முன்னைத் தோற்ற தோற்ற பொருள் முற்றும் கவரும்
               முறை அன்றி,
பின்னைத் தோற்ற பொருள் கவரப் பெறுமோ? நினைக்கப்
               பெறாது'
என்று மொழிந்ததாக வில்லியார் பாடலைத் தருகிறார்.  துரியோதனன் உடனே துச்சாதனனை அழைத்து நீ போய் அழைத்து வா என்று கட்டளை இடுகிறார்.  திரௌபதியோ காந்தாரியின் அரண்மனையில்.   தயங்கினாலும் ஒருவழியாகச் செல்கிறான் துச்சாதனன்.  காந்தாரியும் துச்சாதனன் பின் அஞ்சாது போகும்படி அறிவுரை கூறுகிறாள்.  ஆனால் துச்சாதனன் துரௌபதியின் கூந்தலைப் பிடித்து இழுத்து அழைத்து வருகிறான்.  அவையோர் மௌனம் சாதிக்கிறார்கள்.  கிளர்ந்து எழுகிறார்கள் இந்தக் காட்சியைக் கண்டு வீமனும் தம்பிகளும்.  தருமர் அவர்களது சினத்தைத் தணிவிக்கிறார். "ஆம்போது, ஆகும்; அது அன்றி, ஆய பொருள்கள்,                 அம் முறையே,  போம்போது, அனைத்தும் போம்; முன்னம் பொறுத்தீர்;                இன்னம் பொறும்''   என்றார்.  பெரிய தத்துவ வார்த்தைகள் இவை.  போக வேண்டிய நேரம் வந்தால் போகும்.  வரவேண்டிய நேரம் வந்தால் வரும்.  இவ்வளவு நாள் பொறுத்தது போல் பொறுங்கள் என்று சினத்தைக் குறைக்கிறார்.  ஆகூழினால் நல்லது நடந்தால் போகூழ் வரும் போது இருந்த இடம் தெரியாமல் எல்லாம் அழிந்துவிடும்.  ஆகுஊழ் போகுஊழ் என்று பிரித்தால் ஊழின் வ-மை நமக்குப் புரியும்.  திரௌபதி வீடுமனைப் பார்த்து நியாயம் கேட்கிறாள்.  தருமர் தோற்றபின் என்னை பணயம் எப்படி வைக்க முடியும் என்று வினவுகிறாள்.  வீடுமனுக்கு நடக்கப் போவது என்ன என்பது தெரியும்.  எனவே இதையெல்லாம் இந்த மன்னவர்களிடம் கேள் என்று கூறுகிறார்.  பின்னர் திரௌபதி அவையோரை நோக்கி நீதி வேண்டி முறையிடுகிறாள்.  அவையோர் ஓவியம் போல் அசைவற்று உள்ளனர்.  இப்போது நூற்றுவரில் ஒருவன் பெயர் விகர்ணன் எழுந்து நியாயம் பேசுகிறான்.  இராவணனுக்கு ஒரு விபீடணன் போல் நூற்றுவரில் இவன் ஒரு நியாயவாதி.  எனவே வில்-யார் இவனை வாய்மைக் கடவுள் என்று விதந்து போற்றுகிறார். "விகருணனாம் வாய்மைக் கடவுள  வாள்வேந்தீர், பொல்லா நெறியி லனைவீரும் போகா வண்ணம் புகலணிரோ.'' என்றான்.  உடனே கன்னன் விகருணனைக் கடிந்து "சிறுவனாகிய உனக்கு நீதி பற்றி என்ன தெரியும்.  நாட்டு நடப்பு பற்றி என்ன தெரியும்.  உன்னை யாராவது நியாயம் சொல்லு''என்று கேட்டார்களா என்று கடிந்து கொள்கிறான்.  துரியோதனன் துரௌபதியின் துகிலைக் களையுமாறு கட்டளையிடுகிறான்.  தம்பி துச்சாதனன் இந்த வேலையை தலைமேல் கொண்டு உடனே செயல்படுகிறான்.  உடனே செய்வது ஒன்றும் அறியாது துரௌபதி கண்ணனைத் துதிக்கிறாள். 'கோவிந்தா!' என்று உளம் உருகித் திரௌபதி கதற,  கண்ணன் அருள் செய்தல்  ஆறாகி இரு தடங் கண் அஞ்சன வெம் புனல் சோர,     அளகம் சோர,  வேறான துகில் தகைந்த கை சோர, மெய் சோர, வேறு                   ஓர் சொல்லும்  கூறாமல், 'கோவிந்தா! கோவிந்தா!' என்று அரற்றி,                   குளிர்ந்து நாவில்  ஊறாத அமிழ்து ஊற, உடல் புளகித்து, உள்ளம்                   எலாம் உருகினாளே.  அரு மறை சொல்லிய நாமம் ஆயிரமும் உரை தழைக்க                   அமரர் போற்றும்  திருமலர்ச் செஞ் சேவடியோன் திருச் செவியில் இவள் மொழி சென்று இசைத்த காலை,  மரு மலர் மென்குழல் மானின் மனம் நடுங்கா வகை, மனத்தே வந்து தோன்றி,  கரிய முகில் அனையானும், பிறர் எவர்க்கும் தெரியாமல்,    கருணை செய்தான் '.  கோவிந்தா என்று அழைத்த குரலுக்கு உடனே வந்தான் கோவிந்தன்.  கருணை மழையைப் பொழிந்தான் கார்முகில் வண்ணன்.  துச்சாதனன் கை ஓய்ந்தது.  வீடுமன் மற்றும் விதுரர் உடனே கண்ணீர் சோர கற்பின் தெய்வம் துரௌபதியைப் போற்றி மகிழ்ந்தனர்.  சினத்தில் வீமன் நூற்றுவரைப் போருக்கு அழைக்கிறான்.  துரியோதன் களைத்து நிற்கும் துச்சாதனனை நோக்கி திரௌபதியைத் தன் மடி மீது அமர்த்தும்படி ஆணையிடுகிறான்.  இதைக் கேட்டவுடன் கற்பின் நாயகி திரௌபதி ஒரு சாபம் தருகிறாள்.  எந்த மடியில் என்னை இருக்கவைக்கச் சொன்னானோ அந்த தொடை வழியே தான் துரியோதனன் உயிர் பிரியும் என சாபமிடுகிறாள்  'புன் தொழிலோன் யான் இருக்கக் காட்டிய தன் தொடை                   வழியே புள வாய் குத்தச்  சென்றிடுக, ஆர் உயிர்!'  என்கிறார் வில்லியார்.  இனி வெற்றி முரசு கொட்டும் வரை தலை முடியமாட்டேன் என்று சபதம் இடுகிறாள் பாஞ்சா-. கையினால் நீர் இனி அருந்த மாட்டேன் என்று சபதமிடுகிறான் வீமன்.  கதையால் அடித்து அதன் மூலம் கிடைக்கக் கூடிய நீரையே இனி குடிப்பேன் என்கிறான். கன்னன் உயிரை மாய்ப்பேன் என்று சூளுரைக்கிறான் விசயன். சகுனிதனை மாய்ப்பேன் என்கிறான் நகுலன்.  இப்படி ஆளுக்காள் கொதித்து சூளுரைக்கிறார்கள்.  திருதராட்டிரனுக்கு அச்சம் வந்து விடுகிறது.  விதுரன் கூறியது போல் விபரீதத்தை விருந்திட்டு அழைத்த கதையாகி விட்டதே என்று நினைக்கிறார்.  உடனே திரௌபதியை நோக்கி பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்று கூறி பாண்டவரின் கோபத்தை அகற்ற அவர்கள் சூதில் இழந்த பொருட்களை மீண்டும் கொடுத்து ஊருக்குச் செல்ல விடை தருகிறார்.  தன் திட்டம் பாழாவதைக் கண்டு பொறுக்காத சகுனி சூதில் இழந்ததை இப்படி மீண்டும் பெறுவது அறமாகாதே என்று அறத்தைத் துணைக்கு அழைக்கிறான்.  துச்சாதனனும் ஒத்து ஊதுகிறான்.  இப்போது அறம் சிரிக்கிறது.  இப்படி இவர்கள் பேசியவுடம் இரண்டு மனம் கொண்ட திருதராட்டிரன் வீடுமன் மற்றும் விதுரனைக் கலந்து ஆலோசிக்கிறான்.  துரோணர் தன் பங்குக்கு தனது நீதியைச் சொல்கிறார்.  முதலில் உன் உரிமையை நீ பெற்றுக் கொள்.  அது தான் முறை என்கிறார்.  நீங்கள் ஐவரும் துரௌபதியுடன் பன்னிரண்டு ஆண்டுகள் காடுகளில் வாழ்ந்து பின்னர் ஓர் ஆண்டு தலைமறைவாக இருக்க வேண்டும்.  அப்படி இருந்தால் நீங்கள் இழந்த அரசும் வாழ்வும் வழங்கப்படும் என்று துரோணர் கூறினார்.  அதை பிதாமகரான வீடுமனும் விதுரனும் ஒப்புக்கொண்டனர்.  முத-ல் உரிமை பெற சூதாடுவது என முடிவெடுக்கப்பட்டது.
சூர்யா: மீண்டும் சூதாட்டமா?  இவ்வளவு நடந்தும் புத்தி வரவில்லையா இவர்களுக்கு?
தாத்தா: ஆமாம்.  அனைத்து மன்னவரும் காண தருமர் மறுசூது ஆடுகிறார்.  துரௌபதியும் இதற்கு உடன்படுகிறாள்.  இப்போது தருமர் தன் புண்ணியத்தை ஒட்டமாக வைத்து கவறு ஆடுகிறார்.  தருமம் என்றாவது தோற்குமா?  புண்ணியம் வெல்கிறது.  இம்முறை சகுனி தோற்கிறான்.  நடக்கப் போகும் போரின் முடிவைச் சொல்கிறது இந்த மறுசூதாட்டம்.  வாய்மை வெல்லும் என்பதை நமக்கு முன்கூட்டியே தெரிவிக்கிறது.  இதன்பின் தருமர் தன் தம்பிகளுடனும் திரௌபதியுடன் காட்டிற்குச் செல்கிறார்.  இன்பம் வந்தபோதும் துன்பம் வந்தபோதும் கலக்கமடையவில்லை தருமன்.  மகிழ்ச்சியோடு தான் செல்கிறார்.   "நாட்டிடை எல்லை, பொன்-தாள் நறு மலர் சிவக்க ஏகி,
காட்டிடை புகுந்த போதும், கலக்கம் அற்று, உவகை கூர்ந்தான்-
கூட்டிடை இன்பத் துன்பக் கொழும் பயன் துய்த்து, மாறி,
வீட்டிடை புகுதும்போது, மெய்ம்மகிழ் விபுதர் போல்வான்.'' என்பார் விலலியார். இதே பகுதியை பாரதியார் அவர்களின் பாஞ்சாலி சபதத்தில் படிக்க வேண்டும்.  வீமன் வெகுண்டு பேசுவதைப் படித்தாலே நமக்கு வீரம் வந்து விடும்.  மிக அருமையான பாடல்கள் அவை.  நேரம் கிடைக்கும் போது உனக்கு அவற்றை நான் தனியாகக் கூறுகிறேன். சரியா?
மீதக் கதையை நாளை பார்ப்போமா?

No comments:

Post a Comment