Wednesday, November 17, 2010

MAHABHARATH WAR - FIRST ELEVEN DAYS WAR SCENES FROM VILLIBHARATHAM IN TAMIL

கருங்குளவிசூரைத்தூறீச்சங்கனிபோல்
வருந்தினர்க்கொன்றீயாதான் வாழ்க்கை - அரும்பகலே
இச்சித்திருந்தபொருள் தாயத்தார்கொள்வாரே
எற்றோமற்றெற்றோமற்றெற்று


ஈச்சமரம் ஒன்று. அதில் கருங்குளவி என்னும் கடுவிஷம் கொண்ட குளவி கூடுகட்டி ஏராளமாக இருக்கிறது. சூரை என்னும் முள் அந்த மரத்தின் தூறில் இருக்கிறது. அந்த ஈச்ச மரத்தின் கனியை யாரும் அண்டி, பறித்து உண்ணமுடியாது. துன்பப்பட்டவர்களுக்கு ஒன்றுமே தானம் செய்யாதவன் வாழ்க்கை எப்படியிருக்கும்? பகலில் அவன் மிகவும் இச்சையுடன் வைத்திருந்த பொருள் அன்று இரவிலேயே பங்காளிகள் கைக்கொள்ளும்வண்ணம் அவன் போவான். அந்த மாதிரி ஈயாலோபியை எற்று, மறுபடியும் எற்று; மீண்டும் எற்று! என்னை ஏன் எற்றுகிறாய்?

==========================================================



தாத்தா: இன்று முதல் போர்க் காட்சிகள் பற்றி சொல்லப் போகிறேன்.  கண்ணனின் உததரவுப்படி தருமன் போரில் தனக்குத் துணையாக இருக்கும்படி அனைத்து அரசர்களுக்கும் ஓலைகள் அனுப்புகிறான்.  அதே போல துரியோதனும் அனுப்புகிறான். இருவர் புறமும் அரசர்கள் பலர் வந்து திரளுகிறார்கள். யாகசேனன் தன் மகன்கள் திட்டத்துய்மன், திட்டகேது, சிகண்டி ஆகியோருடன் ஓடோடி வந்தார்.  விராட மன்னனும் தான் வாக்களித்தபடி தன் மகனுடன் வந்தார்.  சேர, சோழ, பாண்டியர்களும் வந்தார்கள் - தருமரைக் கண்டார்கள்.  ஐவரின் மைந்தர்களில் கடோற்கசன், இராவான், அபிமன் ஆகியோரும் வந்து சேர்ந்தார்கள். சீனர், சாவகர், மத்திரர், மாளவர், தெலுங்கர், க-ங்கேசர், கன்னடர், மாகதர், துலுக்கர், குச்சரர், ஒட்ர் இப்படி இந்தியாவைச் சுற்றிலும் இருந்த மன்னர்கள் - இந்திய தேசத்தில் இருந்த மன்னர்கள் எல்லாம் திரண்டு வந்தார்கள் தத்தம் படையுடன்.  வந்த மன்னவர்களை வரவேற்று போரின் காரணத்தை எடுத்துரைத்தார் தருமர்.  இந்த படையின் பலம் ஏழு அக்குரோணி என்று சொல்லப்படுகிறது.   இந்த படைக்கு சிவேதனைச் சேனாதிபதி ஆக்குகிறார் தருமர்.  சிவேதன் விராட மன்னனின் மகன்.  மயிலாக மாறி பின்னர் சிவபெருமானைத் துதித்து வரங்கள் பல பெற்றவன்.  ஆயுதங்களும் பெற்றவன்.
இதேபோல துரியோதனன் பக்கம் க-ங்கர்கோன், சோமதத்தன், கௌசிகன், காம்பிலரசன், தெலுங்கர்கோன், போசன், ஆதிகேகயன், கவுடராசன், மாளவன், வளவன், சேரன், பங்களம், குகுரம், சீனம், பப்பரம், கொப்பம், வங்கம், சிங்களம், துளுவம், அங்கம், ஆரியம், திகத்தம், சேதி, கொங்கணம், கடாரம், கொங்கம், கூபகம் முத-ய நாட்டு அரசர்கள் எல்லாம் வந்து சேர்ந்தார்கள்.  பதினோரு அக்குரோணி சேனை கொண்டதாக அமைந்தது நூற்றுவர் படை.  இவர்கள் பக்கம் போர் புரிய வீடுமர், கிருபன், கன்னன், துரோணர், பகதத்தன் ஆகியோர் இருந்தனர்.  துரியோதனன் வீடுமனைச் சேனாதிபதியாக்கினான்.  பின்னர் போருக்கு உரிய நாளைக் குறிக்க துரியோதனன் வீடுமனிடம் கருத்து கேட்ட போது நாள் குறிப்பதில் வல்லவன் சாதேவன் - பாண்டவரில் இளையவன்.  எனவே அவனிடம் போய் நாள் குறித்து வா என்று அனுப்புகிறார் வீடுமன்.'தளப்பு இலா முகூர்த்தம் வல்லோன் சாதேவன் அல்லது இல்லை; உளப் பொலிவு உடையாய் இன்றே உற்று, அவற் கேண்மின்' என்றான்.களப்ப-க்கு இராவானை அணுகி எப்படியும் அவனிடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என்று கூறுகிறார்.  களப் ப- கொடுக்கப்பட வேண்டியன் வீரனுக்குரிய அவ்வளவு அடையாளங்களையும் கொண்டவனாக இருக்க வேண்டும்.  இராவான் - விசயனின் மகன் அப்படிப்பட்டவன் - எனவே அவனை அணுகி அனுமதி வாங்கும்படி வீடுமன் உரைக்கிறார்.  அது மட்டுமல்ல அவன் ஒரு பகல் பொழுதில் கௌரவர் படைகள் முழுவதையும் வெல்லும் வல்லமை பெற்றவன்.  எனவே, அவர் சொன்னபடி துரியோôனன் முத-ல் சகாதேவனை அணுகி நாள் குறித்துத் தரும்படி கேட்டான்.  சகாதேவனும் அமாவாசை அன்று போரைத் துவக்க மிக நல்ல நாள் எனவும் தெரிவிக்கிறான்.
சூர்யா:  எதிரியிடம் போய் யாராவது நாளைக் குறிப்பார்களா?
தாத்தா: அந்தகாலத்தில் தான் கற்ற வித்தையை முறையாகப் பயன்படுத்துவதில் எல்லோரும் அக்கறை கொண்டிருந்தார்கள்.  எனவே துரியோதனன் அணுகி கேட்டவுடன், நாள் குறித்துக் கொடுத்தான்.  உடனே இராவானை அணுகினான் துரியோதனன்.  தந்தை முறை அல்லவா.  போனவுடன் இராவான் வணங்குகிறான் துரியோதனனை.  வரம் தரவேண்டும் என்று வேண்டுகிறான் துரியோதனன்.  தவறாது தருவேன் என்று அவன் உரைக்க - அவனையே கௌரவர்களுக்காகப் ப- கொடுக்கச் சம்மதம் கேட்கிறான் துரியோதனன்.  இந்த வேண்டுகோளை மறுக்கவே இல்லை இராவான். 'எங்களில்உங்களைப்போல மறுத்து இரண்டு உரைப்பார் இல்லை
கண்டாய்' என்று கூறிஉடன்பட்டனன்.  செய்தி வந்து சேர்ந்தது கண்ணனுக்கு.  இராவான் குறித்த நாளைக்கு துரியோதனன் வரமுடியாதபடி தன் மாயையால் தடுத்து விடுகிறான் கண்ணன்.  பின்னர் இராவான் பாண்டவர்களைப் பார்த்து தகவலைச் சொல்ல வருகிறான்.  அந்த நேரத்தில் கண்ணன் தன்னைக் களப்ப- கொடுக்கும்படி கூறுகிறார்.  களப்ப- கொடுப்பதற்கு உரியவர்கள் இராவானும் கண்ணனுமே என்று கூறி இராவான் ஏற்கனவே கௌரவர்களுக்கு வாக்களித்து விட்டான் என்ற தகவலையும் கூறுகிறார்.  அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த இராவான்,  குறித்த நாளில் துரியோதனன் வரவில்லை எனவும் எனவே தன்னைக் களப்ப-யாகத் தரும்படியும் எட்டுநாட்கள் இந்த போரில் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்கும்படியும் கூறினான் இராவான்.  உடனே அனைவரும் ஒப்புக் கொண்டனர்.  அப்பொழுது கண்ணன் சொல்லும் வார்த்தைகள் இராவானின் பெருமையை நமக்குத் தெரிவிக்கின்றன. கண்ணன், 'நின்னை அல்லதுமண்ணில்என்னை ஒப்பவர் இல்லை - உன்னைத்தவிர உலகத்தில் என்னை யொக்குந்தன்மையார்வேறு எவரும் இல்லை; (ஆதலின்), நம்மில் ஒருவரேவேண்டும் -(ஒத்த உத்தம விலக்கணமுடைய) நம்மிருவருள் ஒருவரே பலியாகவேண்டும்,'என்றான்.  இராவான் காளி கோவில் முன் தன்னைப் ப- கொடுக்கிறான்.  பாண்டவர் பகடு முத-ய பிற ப-களையும் கொடுத்து இறைவனிடம் வரம் வேண்டி மீளுகிறார்கள்.  கண்ணன் சிவேதனை அழைத்து வஞ்சிப்பூ சூடி படையெடுத்துச் செல்லுமாறு கூறுகிறார்.  சிவேதன் பாண்டவர் சேனையை அணிவகுக்கிறான்.  இந்த நேரத்தில் துரியோதனுக்கு கதைப் பயிற்சி கொடுத்து அவன்பால் பேரன்பு கொண்ட பலராமர் இந்த போரில் தன் தம்பி கண்ணனுக்கு எதிராகப் போர் புரிய விருப்பமில்லாததால் விதுரருடன் புனித யாத்திரை புறப்படுகிறான்.

சூர்யா:  தாத்தா பலராமன் பற்றி இன்னொரு தடவை சொல்லுங்க தாத்தா.  இந்த பலராமர் எப்படி கண்ணனுக்கு அண்ணனாகிறார்?

தாத்தா:  பலராமன் திருமா-ன் எட்டாவது அவதாரம்.  கண்ணனுக்குத் தமையன்.  இவன் வசுதேவனுடைய பத்தினிகளுள் தேவகியின் கருப்பத்தில் ஆறுமாதமும் - உரோகிணியின் கருப்பத்தில் ஆறுமாதமும் இருந்து பிறந்தவன்.  இவனிடம் தான் துரியோதனன் ஆயுதப் பயிற்சி பெற்றுக் கொள்கிறான்.  இவன் தன் தங்கை சுபத்திரையைத் துரியோதனனுக்கு திருமணம் முடிக்கக் கருதியிருந்தான்.  ஆனால் கண்ணனோ விசயனுக்கு திருமணம் செய்து வைக்கிறான்.  இதேபோல தன்மகள் வற்சலையைத் துரியோதனன் மைந்தன் லட்சணகுமாரனுக்கு மணஞ் செய்விக்க எண்ணுகிறான்.  கண்ணன் தந்திரமாக வற்சலையை அபிமன்னனுக்குத் திருமணம் செய்து வைக்கிறான்.  இருந்தாலும்  துரியோதனன் மீது தனிப் பாசம் இருந்தது பலராமனுக்கு.  அதனால் தான் துவக்கத்திலேயே நாட்டைத் திரும்பக் கேட்கக் கூடாது என்று தடுத்துப் பார்க்கிறான்.  கண்ணனைப் பார்க்க மனமில்லாமல் - கண்ணனிடம் கூறாமலேயே பலராமன் விதுரனுடன் தீர்த்தமாடச் செல்கிறான்.  சரி கதைக்கு    துரியோதன் வீடுமனைப் போர்த்தளபதி ஆக்கியவுடனேயே யார்யார் எந்த இடத்தில் நின்று போர் புரிய வேண்டும் என்று திட்டமிடுகிறார் வீடுமன்.  அதில் கன்னன் படையின் பின்னணியில் இருக்க வேண்டிய கட்டாயம் வருகிறது.  முன்னணி வீரராகத் தன்னை மதித்து நிறுத்தவில்லை என்ற கோபத்தில் வீடுமன் மடியும் வரை இந்தப் போரில் கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்து வெளியேறுகிறான்.  வில்-புத்தூரார் பாண்டவர் படை எண்ணிக்கையில் குறைந்திருந்தாலும் உயிருள்ள படை என்று நமக்கு எடுத்துச் சொல்கிறார்.  செங்கண்மால் கண்ணன் அந்தப் படையின் உயிர்.   தருமன் மார்பு.  சிவேதன் ஆனனம். (முகம்).  வீமனும் விசயனும் இரு புயங்கள்.  நகுல சகாதேவர்கள் தாள்கள்.  பிற மன்னர்கள் பிற அவயவங்கள்.  இப்படி பாண்டவர் சேனை உயிருள்ள ஒரு வடிவத்தை ஒத்திருந்தது என்கிறார்.  அங்கதேச மன்னன் கன்னன் போர்க்களத்தில் இருந்து தன்னுடைய அகந்தை காரணமாக வெளியேறியது கௌரவப் படைகளை பெரிதும் பாதிக்கத் தான் செய்தது.
சூர்யா: அது என்ன அங்க தேசம் என்ற பெயர்?

தாத்தா: சிவனின் நெற்றிக் கண்ணனின் நெருப்புக்கு இரையாகி எரிபட்ட மன்மதனின் அங்கம் விழுந்த இடம் என்பதால் அங்கதேசம் என்று பெயர்.  சரி கதைக்கு வருவோம்.  எடுத்த எடுப்பிலேயே துரியோதனன் வீடுமனிடம் எத்தனை நாளில் போர் முடியும் என்று கேட்கிறான்.  பேருந்து கிளம்பும் போது ஓட்டுநரிடம் இந்தப் பேருந்து எத்தனை மணிக்குப் போய் இன்ன இடத்திற்குச் சேரும் என்று கேட்டால் சில ஓட்டுநர்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வரும்.  அதுபோல் வீடுமருக்கும் கோபம் பொங்கியது.  ஆனால் பதிலை அமைதியாகக் கூறினார்.  பாண்டவர் படையை ஒரு பக-ல் நான் வெல்வேன் - துரோணர் என்றால் முப்பக-ல் வெல்வார் - கன்னன் என்றால் ஒரு நாளிகையில் வெல்வான் - விசயன் ஒரு கணத்தில் இந்தப் படைகளை மட்டுமல்ல வானவர் படை வந்தாலும் அவர்களையும் சேர்த்து வெல்வான் என்று பதில் சொல்ல துரியோதனன் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டான்.  போர்க்களத்திற்கு வந்த விசயன் எப்போதும் போல முத-ல் கலங்கினான்.  தன்னுடைய உறவினர்கள் - தனக்கு வித்தை சொல்-க் கொடுத்த ஆசான்கள் - இப்படிப் பலவகையில் தனக்குத் தெரிந்த அனைவரும் எதிர்வரிசையில் இருப்பதைக் கண்டு பின்னடைந்தான்.  கண்ணன் அப்போது மிகச் சுருக்கமாக போர் ஏன் நடக்கிறது?  போரே நடக்கவில்லை என்றாலும் அவர்கள் காலத்தின் கட்டாயத்தால் மரணத்தை எதிர் கொள்ள வேண்டியவர்கள் - அரசநெறிப்படி போர் செய்வதும் போரின் போது எதிரிகளை மாய்ப்பதும் குற்றமல்ல என்றெல்லாம் எடுத்துரைக்கிறான்.  வில்-பாரதத்திலே - வியாசபாரதத்தில் கூறப்பட்ட பல நிகழ்வுகள் தவறாமல் சொல்லப்பட்டுள்ளன - ஆனால் சில நிகழ்வுகள் சொல்லப்படவில்லை - நச்சுப்பொய்கையில் அறக்கடவுள் கேட்ட கேள்விகளிலேயே பல விடயங்கள் தவிர்க்கப்பட்டு உள்ளன.  அதேபோல வியாசபாரதத்தில் உள்ளதாகக் கூறப்படும் பகவத்கீதை என்னும் பகுதி வில்-பாரதத்தில் இல்லை.  வில்-புத்தூரார் மட்டுமல்ல ஆழ்வார்களும் பகவத்கீதை என்ற தொடரை எங்கும் பயன்படுத்தவில்லை.

சூர்யா: ஏன் தாத்தா அப்படி?

தாத்தா: ஒன்று பகவத் கீதை என்ற தொடரே வியாசபாரதத்தில் இல்லாமல் இருந்து பின்னர் பல சமய காரணங்களைக் கருதி சேர்க்கப்பட்டிருக்கலாம்.  இப்போது நமக்கு வழங்கப்படுகிற பகவத் கீதை என்னும் புனித நூல் எவ்வளவு பாடல்கள் உள்ளது என்று கேட்டு அவ்வளவு பாடலையும் ஒரே நாளில் படித்துப் பார்க்க முடியுமா என்று யோசித்தாலே சிறிது கடினமான விடயமே.  போர்க்களத்தில் எல்லோரும் போருக்குத் துடித்தெழுந்து முரசு கொட்டும் போது இவ்வளவு பாடல்களை ஒரு தரப்பினர் கேட்டுக் கொண்டிருந்தால் எதிர்தரப்பு வேடிக்கை பார்த்துக் கொண்டா இருக்கும்?  உண்மையிலேயே அந்தப்பகுதி இருந்திருந்தால் தமிழ் இலக்கியத்தில் பல இடங்களில் அது அடிக்கடி சொல்லப்பட்டிருக்கும்.  ஆழ்வார்களும் வில்-புத்தூராரும் அதை சொல்லாததில் இருந்தே எனக்கு ஒரு சந்தேகம் தான்.  நான் ஏற்கனவே சில நூல்களைப் படித்துள்ளேன்.  அதில் முக்கியமானது அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய "பகவத்கீதை'' என்னும் நூல்.  அதிலே அவர் அந்ப் பகுதி பின்னால் இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்ட பகுதி என்பதை மிக ஆணித்தரமாகச் சொல்-யிருப்பார்.  கருத்தை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் நம்முடைய முடிவு.  சரி - கதைக்கு வருவோம்.  இந்த வில்-பாரதத்தில் ஆறு பாடல்களிலே அந்த பகவத்கீதை தத்துவம் முழுவதும் எடுத்துச் சொல்லப்படுகிறது.  எனவே ஆறு பாடல்களையும் ஒவ்வொன்றாக நாம் பார்ப்போம்.  "'யான் மலைவுறேன், இனி' எனா, அன்று வசுதேவன் மகனோடு உரைசெய்தான்; அமரில் அவனும்  இவனோடு உரை செய்வான்''.  கண்ணன் விசயனின் மயக்கத்தைத் தெளியவைக்க சொல்லும் பாடல்கள் இதோ.
'மாயை என்று ஒருத்தி தன்பால் மனம் எனும் மைந்தன் தோன்றி, 
தூய நல் அறிவன் தன்னைத் தோற்றம் இன்றாக்கி வைத்தான்; 
தாயொடு, தந்தை, மக்கள், தாரம், என்று இவர்பால் வைத்த 
நேயமும் அவன்தனாலே நிகழ்ந்தது ஓர் நினைவு கண்டாய். 
விசயா - நீ உள்ளதை இல்லாததாகவும் - இல்லாதததை உள்ளதாகவும் காட்டக்கூடிய மாயை என்னும் சக்திக்கு ஆட்பட்டு விட்டாய்.  இதனால் உன்னிடம் இயற்கையாக உள்ள தத்துவ அறிவு மறைந்துவிட்டது.  இப்பொழுது விபரீத ஞானம் தலையெடுத்துள்ளது.  எனவே தான் ஆன்மா என்பது உள்ளது என்பதை மறந்து தேகத்தின் மீது நம்பிக்கை வைத்து தாய்-உடன்பிறப்பு-நண்பன்-ஆசான் என்ற நினைவுகள் வந்துள்ளது.   இவையெல்லாம் பொய்யபிமானம்.






குயின்ற வைம்பொறிவாய் நின்று குறித்த வைம் பொருளுந்தானே அயின்றுமுக்குணங்களோடுமறுவகைப்படைகளோடும் பயின்றரசாளுமந்தமனமெனும்பகைவனாங்குத் 
துயின்றபோதொளித்துநின்றதோன்றலுந்தோன்றுங் கண்டாய்.

நம் சிந்தை ஐம்புலன்களுக்கு ஆட்பட்டு - முக்குணங்களிலே மயங்கி - மனம் போன போக்கில் சிந்தனை செல்லாமல் அடக்கி வைத்தால் தத்துவ ஞானம் இருக்கும்.  அது உட்பகைகளாலும் வெளிப்பகைகளாலும் வெல்லப்பட்டால் விவேகம்  அகன்றுவிடும்.  இவைகளில் மயங்கால் சிந்தனை தெளிவாக இருந்தால் தத்துவஞானம் இருக்கும்.
ஐம்பூதங்கள் என்பவை நிலம்-நீர்-தீ-காற்று-ஆகாயம்
இதிலே ஐம்பொறிகள் மெய்-வாய்-கண்-மூக்கு-செவி
ஐம்புலன்கள் ஊறு - சுவை ஸ்ரீ ஒளி - நாற்றம் - ஓசை
முக்குணம் என்பது சத்துவம் - ரஜஸ் - தமஸ்
அறுவகைச் சேனை - கோபம், உலோபம், மோகம், மதமாற்சரியம் போன்றவை



     
அந்தநல்லறிவன்றன்னையறிந்தவரறிஞராவார் தந்தையால்வகுக்கப்பட்டசராசரப்பொருள்கடோறும். வந்தவான்றீம்பானெய்போலுயிர்க்குயிராகிவாழும் பந்தமதுணர்ந்துநேரேபார்க்குங்காற்பகையார்நண்பார்.
    

அந்த தத்துவஞானம் என்னும் தலைவனை அறிந்தவனே சிறந்த சிந்தனையாளர்கள் - அறிவாளிகள்.  இறைவனால் படைக்ப்பட்ட அசையும் அசையாப் பொருட்களிலே பா-லே நெய் உள்ளது போல் எல்லா இடத்திலும் ஆன்மாவும் நல்லறிவும் இருக்கும்.இருக்கத்தான் செய்யும். அப்படி அறிந்தால் பகையோ நட்போ இவ்வுலகில் கிடையாது

உம்பருமுனிவர்தாமும்யாவருமுணராவொன்றை இம்பரின்றுனக்குநானேயிசைவுறவுணர்த்தாநின்றேன் ஐம்பெரும்பூத்தானுமமைத்தனவுடலம்யார்க்கும் நம்பனுமொருவனுள்ளேஞானியாய்நடத்துகின்றான்.
இதை தேவர்களும் - முனிவர்களும் ஏன் எல்லோரும் முறையாக அறியாத ஒன்று தான். இருப்பினும் மாயைக்கு ஆட்பட்டு மயங்கி உள்ள உனக்கு இவ்வொழுது அதை உணர்த்துகிறேன்.  ஒப்பற்ற இறைவன் என்பவன் ஐம்பொறிகளின் உள்ளே இருக்கிறான்.  எல்லாவற்றையும் கடந்த இறைவன் உள்ளே இருப்பதால் அவன் பெயர் கடவுள்.  அவனே ஞானியாய் இருந்து நம்மை நடத்துகிறான். - ஆட்டுவிக்கிறான்.  நாம் ஆடும் பம்பரம் போன்றவர்கள் தாம்.  
     
                        
என்னைநீபுகலக்கேண்மோவெங்குமாயாவுமாகி மன்னியபொருளும்யானேமறைக்கெலாமுடிவும்யானே உன்னையான்பிறிவதில்லையொருமுறைபிறிந்துமேனாள் நன்னிலாவெறிக்கும்பூணாய்நரனுநாரணனுமானோம்.
   
விசயா - எல்லா இடத்திலும் பொருந்தி - எல்லாப் பொருளுமாய் - எப்போதும் அழியாமல் உள்ள பரம்பொருள் நானே தான்.  உன்னை நான் எப்போதும் பிரிவதில்லை.  ஒரே ஒருமுறை நான் நாராயணனாகவும் நீ நரனாகவும் அவதரித்துள்ளோம்.  அப்போது நான் ஆசானாக இருந்து நீ மாணாக்கனாக இருந்தாய்.  அதே நிலை தான் இப்போதும்.  இதை திருவாய்மொழியிலே மிக நன்றாக விவரித்துள்ளார் ஆழ்வார்.
  
."செய்கின்ற கிறியெல்லாம் யானே யென்னும் செய்வானின்
றனகளும் யானே யென்னும், செய்துமுன் னிறந்தவும் யானே யென்னுஞ் செய்கைப்
பயனுண்பேனும் யானே யென்னும் செய்வார்களைச் செய்வேனும் யானே யென்னும்"
என்றும், "உற்றார்க ளெனக்கில்லை யாருமென்னும் உற்றார்க ளெனக்கிங்கெல்லாரு
மென்னும், உற்றார்களைச் செய்வேனும் யானே யென்னும் உற்றார்களை
யழிப்பேனும் யானேயென்னும்" என்றுந் திருவாய்மொழியிற் கூறியுள்ளவற்றின்
கருத்துக்களை இங்கே யுணர்க. கொல்பவனும் கொல்லப்படுபவனும்
கொலைத்தொழிலும் கொல்விப்பவனும் எல்லாம் நானே யாதலால், நீ உன்னைக்
கொல்பவனாகவும், சுற்றத்தவரைக் கொல்லப்படுபவராகவும் மாறுபாடாக நினைத்துப்
பந்து வதத்தைப் பற்றிச் சிறிதுஞ் சிந்திக்கவேண்டா'' என்று சொல்வதாக அந்தப் பாடல் உள்ளது.
    
பின்னொருபிறப்பின்யாமேயிராமலக்குமப்பேர்பெற்றோம் இந்நெடும்பிறப்பினீயும்யானுமாயீண்டுநின்றோம் நின்னிடைமயக்குமிந்தநேயமுமொழிகவென்று தன்னிலையவற்குக்காட்டித்தத்துவந்தெளிவித்தானே.
     
மற்றொரு பிறவியிலே நான் இராமனாக - நீ இலக்குவனாக இருந்தாய். இந்த அவதாரத்திலே கண்ணனாக நான் - விசயனாக நீ என உள்ளோம்.  எனவே நான் உரைத்தரைப் புரிந்து கொண்டு நண்பர் - உறவினர் என்ற மயக்கத்தி-ருந்து விடுபடுவாயாக எனக் கூறி தெளிவித்தான் கண்ணன்.  ஒருவாறு தெளிந்தபின் கண்ணன் பாண்டவர்களுடன் வீடுமனைச் சந்தித்து வணங்கி - "நீங்களே இங்கு வந்து போர் புரிந்தால் உங்களை நாங்கள் வெல்லமுடியுமா? என்று கேட்க அவர் தன்னை வெல்லும் உபாயத்தை - சிகண்டியை வைத்துத் தன்னை வெல்லமுடியும் என்று கூறுகிறார்.  பின்னர் ஐவருடனும் துரோணரை வணங்கி "நீங்கள் மனது வைத்தால் தான் இந்த ஐவரும் வென்று அரசாள முடியும் - உண்மை வெல்லும் - உங்கள் மாணவன் விசயன் வெல்ல முடியும்'' என்று கூறியவுடன் அவரும் தான் மாளும் வகையை உரைக்கிறார்.
"என் மகன் எனக்கு முன்னே இறந்தனன் என்று, வானில் 
வில் மகபதியை ஒக்கும் வேந்தன் முன் சொல்லின், சூரன் 
தன் மகன் மகனே! பின்னைச் சாபம் ஒன்று எடுக்கிலேனே.''
துசாபம் என்றால் வில்.  என் கையில் வில் இருக்கும் வரை என்னை யாராலும் வெல்லமுடியாது.  ஆனால் என் மகன் எனக்கு முன்னே இறந்தான் என்று உண்மைக்குப் பெயர்போன ஒருவன் கூறினால் அடுத்த நொடியே நான் வில்லை எடுக்க மாட்டேன்.  அந்த நேரத்தில் என்னைக் கொல்ல முடியும் என்று தன் முடிவை தானே உரைக்கிறான்.  வேள்வி ஒன்றில் என்னைக் கொல்வதற்கென்றே திட்டத்துய்மன் உதித்துள்ளான்.  இந்த நேரத்தில் - என் கையில் வில் இல்லாத நேரத்தில் - அவன் என்னைக் கொல்ல முடியும் என்கிறார் துரோணர். " சமரிடைத் திட்டத்துய்மன் வன்புடன் எனக்குக் கூற்றாய் மலைகுவன்; மலைந்த அன்றே, நின் பெருங் கருத்து முற்றும்; ஏகுவீர், நீவிர்!' ''. இவ்வளவும் முடிந்த பிறகு மாயோன் வியூகம் அமைத்து நிற்கும்படி பாண்டவசேனைக்குக் கட்டளையிடுகிறான்.  போர் தொடங்குகிறது.  தேர்ப்படையும் தேர்ப்படையும் மோதின.  வேழப்படையும் வேழப்படையும் மோதின.  வாள்வீரர்களும் வாள்வீரர்களும் மோதினார்கள். வேல்கள் வைத்துக் கொண்டிருந்தவர்கள் வேல் வைத்துக் கொண்டிருந்தவர்களுடன் மோதினார்கள்.  மன்னர்கள் மன்னர்களோடு மோதினார்கள்.  அமைச்சர்கள் அமைச்சர்களோடு மோதினார்கள்.

கொங்கர், போசலர், போசர், சிங்களர், குகுதர், ஆரியர், துளுவரும், 
கங்கர், சோனகர், யவனர், சீனர், கலிங்கர், தத்தர், தெலுங்கரும், 
வங்கர், கோசலர், தமிழர், குண்டலர், ஒட்டர், மாளவர், மகதரும், 
இங்கும் அங்கும் அணிந்து நின்றவர், எதிர் முனைந்தனர் இகலியே. 
விசயன் வீடுமனுக்கு எதிராகப் போரிடுகிறான்.  வீடுமன் ச-க்கும் அளவுக்கு அவனுடன் வந்தவர்களை வீமனும் அபிமன்னும் கணைகளால் தாக்குகிறார்கள்.  சல்-யன் வீசிய வேலால் விராட மன்னன் மகன் உத்தரன் மடிகிறான்.  உடனே வீமன் வெகுண்டு துரியோதனனுடன் பொருது அவனது வில்லை ஒடித்து தாக்குகிறான்.  விராடனின் மகன் சிவேதன் ஈசன் வழங்கிய வில்லோடு தோன்றி சல்-யனைத் தாக்குகிறான்.  உடனே துரியோதனன் வீடுமனையும் பல மன்னர்களையும் அனுப்பி சல்-யனைப் பாதுகாக்க ஏற்பாடுகள் செய்கிறான்.   சிவேதனை எதிர்த்து நிற்க யாராலும் முடியவில்லை.  இந்த நேரத்தில் வீடுமன் சிவேதனைப் பார்த்து அவன் சிவன் வழங்கிய வில் வைத்திருப்பதால் தோற்கடிக்கமுடியவில்லை என்பதைப் புரிந்து கொண்டு "உனக்கு வில் தவிர வேறு ஆயுதம் வைத்து போர் புரியத் தெரியாதா?'' என்று கே-யாகப் பேசுகிறார்.  உண்மையைப் புரிந்து கொள்ளாத சிவேதன் வாள் கொண்டு பொருத வருகிறான்.  அதற்குள் வீடுமர் அவனது கையைத் துண்டித்து உயிரையும் போக்குகிறார்.  முதன்முத-ல் போர்நியதி மீறப்படுகிறது.  அழகாக வில்-புத்தூரார் கூறுகிறார். " வாளின் எதிர் வெஞ் சிலை வளைத்து, வய வீரன் தோள் இணையில் ஒன்று துணியக் கணை தொடுத்தான்''.  மகன்களை இழந்த விராடனுக்கு கண்ணனும் தருமனும் சமாதானம் சொல்கிறார்கள்.  விராடனோ தன் உயிரும் தருமனுக்காக உள்ளதே என மறுமொழி கூறுகிறான்.  அடுத்த நாள் போருக்கு கண்ணன் திட்டத்துய்மனைச் சேனாதிபதியாக நியமிக்கிறார்.  முதல் சேனாதிபதி சிவேதன் களத்தில் ப-யாகி வீரசுவர்க்கம் அடைந்து விட்டாரே. 
இரண்டாம் நாள் போர் துவங்குகிறது.  தருமர் தன் தம்பியரோடு திட்டத்துய்மனைத் தளபதி ஆக்கி களத்திலே நிற்கிறார்.  வீடுமன் அணிவகுத்து துரியோதனனோடு நிற்கிறார். திட்டததுய்மன் துரோணரோடு பொருது தோற்று தப்பித்தால் போதும் பிழைத்தால் போதும் என்று ஓடுகிறான்.  சேனைத் தலைவன் நிலைகண்டு வீமன் உடனே விரைகிறான் அந்த இடம் நோக்கி.  அப்போது வடக-ங்கத்து மன்னன் சக்கரதேவன் என்னும் மன்னன் வீமனைத் தடுத்துப் போரிடுகிறான். வீமன் தன் வில் கொண்டு சக்கரதேவனையும் அவனது மைந்தர்களையும் துவம்சமாக்கி கொல்கிறான்.
சூர்யா:  தாத்தா வீமன் என்றால் கதையோடு தானே வருவார்? நீங்க வில்லால் தாக்கினார் என்றல்லவா கூறுகிறீர்கள்?

தாத்தா: ஆமாம்டா நானும் சிறுவனாக இருந்த போது அப்படித்தான் நினைத்தேன்.  ஆனால் வீமனும் வில்வித்தையில் தேர்ந்தவன் தான்.  துரியோதனன் தம்பிகளை வில் வளைத்தே கொல்கிறான் வீமன்.  நம்முடைய தவறான எண்ணத்தை நாம் முத-ல் கைவிடவேண்டும்.  கதைக்கு வருவோம்.  முன்னணியில் உள்ள வேழப்படையை கலக்கி பல யானைகளை வீழ்த்துகிறான் வீமன்.  நிலைமையைக் கண்ட வீடுமர் வீமனுடன் மோத விரைகிறார்.  உடனே அபிமனும் வீடுமனை வளைத்துப் போர் தொடுக்கிறான்.  வீமனுடன் போரிட பல மன்னர்களை ஏவுகிறான் துரியோதனன்.  உடனே விசயன் அவ்விடத்திற்கு வந்து வீமனோடு தோள் கொடுத்து நிற்கிறான்.  எல்லா அரசர்களும் அஞ்சி பின்னிடுகிறார்கள்.  சூரியன் மறைகிறான்.  இரண்டாம் நாள் போர் முடிகிறது.  பின்னிட்டு வந்த அரசர்களைத் துரியோதனன் அச்சுறுத்துகிறான்.
மூன்றாம் நாள் போரில் வீடுமன் கருட வியூகம் அமைக்கிறார்.  கண்ணன் தானைத் தலைவனை அழைத்து அர்த்தசந்திர வியூகம் அமைக்க உத்தரவிடுகிறார்.  விசயனையும் அபிமனையும் வீடுமனும் பிறரும் வளைத்துத் தாக்குகிறார்கள்.  வீமனை துரியோதனன் தன் துணைவர்களுடன் தாக்குகிறான்.  கடோற்கசன் தன் தந்தைக்கு உதவ வருகிறான்.  அவன் எறிந்த அம்பு துரியோதனனை காயப்படுத்துகிறது.  உணர்வு அற்று வீழ்கிறான் துரியோதனன்.  அவன் தேர்ப்பாகனை அபிமன் வேல் எறிந்து மாய்க்கிறான்.  செய்தி கேட்ட வீடுமன் விசயனை விடுத்து ஓடிவருகிறார்.  துரியோதனனை எடுத்துத் தேரில் கிடத்தி மூர்ச்சை தெளிவிக்கிறார்.  கோபமடைந்த வீடுமன் கடும்போர் செய்து அபிமனையும் கடோற்கசைனையும் விரட்டுகிறார்.  விசயன் வாளாவிருக்கிறான்.  சினம் கொண்ட கண்ணன் தேரி-ருந்து இறங்கி தன் ஆழியுடன் விரைகிறார் வீடுமனைச் சாய்க்க.  இது கண்ட வீடுமன் தன் தேரி-ருந்து இறங்கி கண்ணனைத் துதிக்கிறார்.
'ஆரண கற்பித! மாதவ! அச்சுத! 
ஆழியிடைத் துயிலும்  காரண! சிற்குண ரூப! 
மலர்க் கொடி காதல் மனத்து உறையும்  நாரண! அற்புத! 
வானவருக்கு ஒரு நாயக! நிற் பணியும்  வாரணம் முத்தி விசாலதலத்திடை வாழ்வுற வைத்தவனே!  
'ஆவி அழித்தனை, தூணில் உதித்து, 
அடல் ஆடகனைத் தலை நாள்;  
மாவலியை, சிறு மாண் உருவத்துடன், 
வார் சிறை வைத்தனையால்;  
ஏவில் அரக்கனை வீழ அடர்த்தனை; 
யான் ஒர் இலக்கு எனவோ,  நீ வலியின் சினம் மூளும் மனத்தொடு நேமி                   எடுத்ததுவே    
 'வான் நரகில் புகுதாமல் எனக்கு உயர் வான் உலகைத் தருவான்,  
நீ நினைவு உற்றது போன பிறப்பில் என் நீடு தவப் பயனே;  
யானும் இனிப் பிறவாமல் அளித்தருள்; ஈச!'' பலவாறு துதித்தான் வீடுமன்.  விசயன் கண்ணனைத் தொழுது தான் நல்லமுறையில் போர்புரிவதாக வாக்களித்த பிறகு சினம் தணிந்து கண்ணன் தேர் ஓட்ட வருகிறான்.  விசயனின் கடுமையான தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் கௌரவப் படை பின்னடைகிறது.  கதிரவன் மேற்கே மறைகிறான்.  மகிழ்ச்சியில் திளைத்து பாண்டவர் படை தூங்கவில்லை.  கொதிப்பில் உறங்கவில்லை கௌரவர் படைகள்.
நான்காம் நாள் போரில் வீமன் பழையபடி வேழப்படையைத் துவம்சம் செய்கிறான்.  துரியோதனன் தன் தம்பிகளோடு வந்து தடுக்கிறான்.  வீமன் வெகுண்டு போரிடுகிறான்.  வீமன் கணையால் துரியோதனன் தளர்கிறான்.  சகுனி மற்றும் சல்-யன் வந்து துரியோதனனை எடுத்து அணைத்து அழைத்துச் செல்கிறார்கள்.  வீமனின் கணையால் துரியோதனன் தம்பியர் ஐவர் மாளுகிறார்கள்.  இப்படியாகத் துரியோதனனின் சேனைகள் சிதறுகின்றன.  உடன் பகதத்தன் வந்து அனைவரையும் தேற்றி வீமனுடன் மோதுகிறான்.  இந்த பகதத்தன் என்பவன் நரகாசுரன் மகன்.  நரகாசுரன் மரணமடைந்த பிறகு கண்ணனால் இளமையில் வளர்க்கப்பட்டவன்.  இவன் அரக்கர்களுக்கு எதிராக இந்திரனுக்கு உதவி புரிந்தவன்.  மிக்க ஆற்றல் உடைய வீரன். திருமால் - நிலமடந்தைக்குப் பேரன் அல்லவா.  பகதத்தன் வரவால் பாண்டவ சேனை தளர்வதைக் கண்ட கடோற்கசன் அங்கு வருகிறான். பற்பல மாய வடிவம் கொண்டு பகதத்தனைத் தாக்குகிறான்.  இந்த போரில் கடோற்கசன் வெற்றி பெறுகிறான்.  பகதத்தன் தப்பி ஓடுகிறான்.  சூரியனும் மறைகிறான்.  மைந்தர் ஐவர் மாண்டதைக் கேட்ட காந்தாரி அழுது சோர்கிறாள்.  பலவகையில் புலம்புகிறாள்.
ஐந்தாம் நாள் போரில் விசயன் கண்ணனுடன் புறப்பட்டு வீடுமனை அடைகிறான்.  வழியிலேயே க-ங்க மன்னன் தடுக்கப் பார்க்கிறான்.  தன் கணையால் விசயன் அவனைப் புண்ணாக்குகிறான்.  சல்லடையாகத் துளைக்கிறான்.  தடுக்க ஓடோடி வருகிறார் வீடுமன்.  அவர் வில்லைத் துணிக்கிறான் விசயன்.  துரியோதனன் தன் தம்பிகளுடன் வந்து வீமனுடன் போரிடுகிறான்.  வீமனின் அம்பால் துச்சாதனன் தோற்று ஓடுகிறான்.  துரியோதனன் ஓர் அம்பு பட்டு அல்லற்படுகிறான்.  உடனே பூரிசவா என்னும் மன்னன் வந்து வீமன் மீது இரு கணைகளை விடுகிறான்.  உடனே சாத்தகி வந்து பூரிசவாவுடன் போர் தொடுக்கிறான்.  கதிரவன் மேற்குத் திசையில் சாய்கிறான்.  அன்றைய போர் முடிகிறது.
ஆறாம் நாளன்று திட்டத்துய்மன் மகரவியூகம் வகுத்து களத்திலே நிற்கிறான்.  வீடுமன் கிரவுஞ்ச வியூகம் வகுத்து எதிர்க்கிறார்.  துரோணர் வீமனோடு போர் புரிய வருகிறார்.  ஆசானது தேர்க்குதிரைகளையும் தேர்ப்பாகனையும் அழிக்கிறான் வீமன்.  இந்த நேரத்தில் சல்-யன் வீரம் பேசிக் கொண்டு வீமனை எதிர்க்கிறான்.  வீமன் அவனையும் தோற்கடித்து விரட்டுகிறான்.  இதைக் கண்ட துரியோதனன் தன் மாமன் சகுனியுடன் வந்து வீமனை எதிர்க்கிறான்.  வீமன் கணையால் பல மன்னர்கள் மடிய, துரியோதனன் தன் வ- இழந்து பின்னிடுகிறான்.  இந்த நேரத்தில் விகன்னன் வீரர் பலருடன் வந்து அபிமனோடு மோதுகிறான்.  தேர் இழக்கிறான்.  சித்திரசேனன் தேரில் தத்தி ஏறுகிறான்.  அபிமன் அம்பினான் விகன்னனது உடல் சிதையுமாறு கணை தொடுக்கிறான்.  கௌரவர் படை பின்வாங்குகிறது.  சூரியன் மறைகிறான்.  அன்றைய போர் முடிகிறது.  பாண்டவர் அனைவரும் அபிமன் வீரத்தைப் பாராட்டிப் புகழ்கிறார்கள்.
ஏழாம் நாள் போர்.  கண்ணன் பாம்பு வியூகம் அமைக்கக் கட்டளை இடுகிறான்.  வீடுமன் சகட வியூகம் அமைக்கிறான்.  பாண்டிய மன்னனும் துரோணரும் மோதுகிறார்கள்.  பாண்டியன் தோற்கிறான்.  உடனே பாண்டியனைக் காக்க கடோற்கசன் விரைகிறான்." மன்றல் நிம்ப நாள் மாலை மௌலியான், மாறன், மீனவன், வழுதி, பஞ்சவன், அன்று பஞ்சவர்க்காகவே உடன்று, அந்தணற்கு உடைந்து, அஞ்சி ஓடினான'' என்கிறார் வில்-யார்.  ஏழாம் நாள் போரில் விசயனாலும் வீடுமனாலும் பல வீரர் மாள்கிறார்கள்.  சகுனி மற்றும் சல்-யனை வெல்கிறான் வீமன்.  ஏழாம் நாள் போர் நிறைவு பெறுகிறது.
எட்டாம் நாள் போரில் வீடுமர் பீடுநடை போடும் சூசி வியூகம் எனப்படும் குதிரைவியூகத்தை அமைக்கிறார்.  கண்ணன் சகட வியூகத்தை அமைக்கச் சொல்கிறார். கெட்ட எண்ணம் கொண்ட துரியோதனன் மிகப்பெரிய படையுடன் வந்து வீமனை எதிர்க்கிறான்.  சினம் கொண்ட வீமன் கணைமழை பொழிகிறான்.  துரியோதனனின் தம்பியரில் எண்மர் வானுலகம் செல்கிறார்கள்.  வீடுமன் வந்து கணைகளைத் தடுத்து துரியோதனனைத் தேற்றுகிறார்.  கடோற்கசனும் இராவானும் பல வடிவு கொண்டு போர் செய்து கௌரவர் சேனையைக் கலக்குகிறார்கள்.  பகனது தம்பி அலம்புசன் என்னும் பெருவீரன் வீமன் மேல் வெகுண்டு மோதுகிறான்.  அலம்புசன் பின்னர் இராவானுடன் போரிட்டுத் தோற்கிறான்.  இராவான் பாம்பின் மகன்.  எனவே பல பாம்புகள் வடிவெடுத்து நூற்றுவர் சேனையை மிரட்டுகிறான்.  பாம்பென்றால் படையும் நடுங்குமே. தோற்றோடிய  அலம்புசன் திரும்பவும் கருடன் வடிவெடுத்து வந்து இராவானை வாளினால் கொல்கிறான்.  துரோணரும் அசுவத்தாமனும் சேர்ந்து பாஞ்சாலர் மேல் அம்பு தொடுக்கிறார்கள்.  அபிமன் மற்றும் வீமன் வந்து இராவானைக் கொன்ற படைகள் மீது போர் தொடுக்கிறார்கள்.  துரியோதனன் தன் தம்பியருடன் வந்து தடுக்கிறான் வீமனை.  வெகுண்ட வீமன் கணைமழை தொடுத்து துரியோதன் தம்பியருள் ஏழுபேரை மாய்க்கிறான்.  எட்டாம் நாள் போர் முடிகிறது.  கண்ணன் பாண்டவரை இராவான் மறைவு குறித்து வருந்த வேண்டாம் எனவும் அவன் களப்ப-க்கு ஆளான போதே சில நாள் அதாவது எட்டு நாள் வரை போரைக் காண ஆவல் கொண்டதால் அவன் போர்க்களத்தில் இருந்ததாகவும் அது தன் மாயையால் நடந்தது என்பதையும் கூறி வருத்தப்பட வேண்டாம் என ஆறுதல் கூறுகிறான்.  
"அன்றே களத்தில் பலி ஊட்டிய ஆண்மை வீரன் 
இன்றே இறந்தான்; இதற்கு உன்னி, இரங்கலணிர்' என்று, 
ஒன்றே மொழியும் உரவோன் முதல் ஐவருக்கும் 
குன்றே கவித்த குடைக் கோவலன் கூறினானே.''
இத்துடன் எட்டாவது நாள் போர் முடிகிறது.

======================================================

சூர்யா: நேறறு இராவான் இறந்து விட்டானே தாத்தா.  ஏமாந்துட்டானே?
தாத்தா: இல்லேடா.  அவன் களப்ப-க்கு ஆளானவன்.  கண்ணனிடம் எட்டுநாள் போர்க்காட்சியைக் காண வரம் பெற்று இந்தப் போரைப் பார்த்தான்.  பங்கும் கொண்டான்.  ஆனால் சொன்ன சொல் தவறியவன் அல்லவா? துரியோதனனிடம் களப்ப-க்கு ஒப்புக்கொண்டு நேரத்துக்கு வரவில்லை என்ற காரணம் காட்டி பாண்டவர்களுக்கு களப்ப- ஆனவன் தானே.  எனவே இறைவனின் வரம் தவறாது.  ஒரு இடத்துக்கு குறித்த நேரத்துக்கு வர ஒப்புக் கொண்டால் போகவேண்டும்.  போகாதது துரியோதனன் தவறு.  அதனால் பாரதப் போரில் தோற்கிறான்.  இப்படி நியாயங்களும் நியாயங்களும் - தவறுகளும் தவறுகளும் மோதிக் கொள்ளும் களம் தான் இந்தப் பாரதப் போர்.  முதல் நாளிலேயே பார்த்தோமே?  சிவேதன் - பாண்டவர்களின் படைத் தளபதி - சிவனின் வில்லைப் பெற்றவன் - அந்த வில் இருக்கும் வரை அவனைத் தோற்கடிக்க முடியாது.  வீடுமன் உனக்கு வில்லைத் தவிர வேறு ஆயுதம் தெரியாதா? என்று கேட்டவுடன் அகந்தையும் சினமும் ஒன்று சேர வாளை எடுத்துப் போரிட வருகிறான்.  வீடுமர் உடனே தன்னுடைய வில்லால் அவனைக் கொன்று விடுகிறார்.  இப்படி அகந்தையின் காரணமாக சிவன் வில் கையில் இருந்தும் தோற்றான் சிவேதன்.  வாளுடன் வருபவனை வில் வைத்து தாக்கினார் வீடுமர்.  போர்நெறி தவறினார் முதல் நாளிலேயே.  சரி, கதைக்கு வருவோம்.  ஒன்பதாம் நாள் போர் தொடங்குகிறது.  எட்டாம் நாள் இரவிலேயே துரியோதனன் துச்சாதனனை கன்னனிடம் அனுப்பி போரில் பங்கு பெறுமாறும் படைஇழப்பு அதிகம் ஆவதாகவும் தெரிவிக்கிறான்.  "நீ வில் எடுக்கில் அனைவேமும் உய்தும்; நினையாரும் வாகை புனையார்.''ஆனால் கன்னனோ வீடுமன் மாண்ட பிறகே வருவேன் போர்க்களத்துக்கு.  வந்து வெற்றி பெற்று துரியோதனனுக்கு அரசைப் பெற்றுத் தருவேன் என்கிறான்.  "முன் உந்தை தந்தை உரைசெய்த மேன்மை அறியாய்கொல்? அம் பொன் முடியாய்! தன் உந்து தேரும், வரி வில்லும் உண்டு, சரம் உண்டு; நாளை அவனே உன்னும் களத்தில் அவர் வானம் ஆள, உலகு ஆளுவிப்பன் உனையே.''
தகவல் வந்து சொன்னவுடன் அதை அப்படியே போய் வீடுமரிடம் தெரிவிக்கும்படி துச்சாதனனுக்கு ஆணையிடுகிறான் துரியோதனன்.  போய்த்  தெரிவிக்கிறான் துச்சாதனன்.  நடக்கப் போவது தெரியும் வீடுமருக்கு.  எனவே ஒரு நாள் பொறுங்கள்.  பிறகு கன்னன் வந்து உங்களை வாழவைக்கட்டும் என்று பதில் உரைக்கிறார்.
"ஒரு நாளும் நீவிர் பொறுமின்கள்; உம்மை உலகு ஆளுவிக்க வருவோர் 
வரு நாள் தொடங்கி அமர் செய்து, தெவ்வை மடிவிப்பர், சொன்ன வகையே; 
குருநாடும் மற்றை வளநாடும் எய்தி, நுமரோடு இயைந்து குழுமி, 
பெரு நாள் இருந்து, நனி வாழ்திர்!''
மறுநாள் வீடுமர் தன் சேனையைத் சருப்பதோபத்திர வியூகமாக வகுக்கிறார்.
சூர்யா:  தாத்தா அது என்ன சருப்பதோபத்திர வியூகம்? ஒண்ணும் புரியல்ல தாத்தா.
தாத்தா: நான்கு புறம் எங்கு பார்த்தாலும் ஒரே மாதிரியாகத் தெரியும் வடிவம் என்று பொருள்.  உடனே கண்ணன் பற்பராகம் என்னும் செந்தாமரை மலர் போல அணிவகுக்கச் சொல்கிறார்.  வியூகம் என்றால் அணிவகுத்தல் என்று பொருள்.  பெரியா விளையாட்டு விழாக்களில் இறுதி நாளன்று பற்பல உருவங்கள் மாதிரி வீரர்கள் அணிவகுப்பதில்லையா அந்த மாதிரி.  சரியா.  எல்லோரும் வீமனைக் குறி வைக்கிறார்கள்.  அலம்புசன் வந்து வீமனோடு வாட்போர் செய்கிறான்.  வீமன் வாட்போரில் வெற்றிபெற்று ஒரு கரத்தை துணித்து விடுகிறான்.  மற்போர் துவக்குகிறான்அந்த அரக்கன்.  அதிலும் வீமனே வெற்றி கொள்கிறான்  பின் விற்போர் தொடங்குகிறது.  விற்போரிலும் வெற்றி வீமனுக்கே.  பார்க்கிறான் அந்த அரக்கன்.  ஒரு மலையை வீமன் மேல் விட்டெறிகிறான்.  தூரத்தில் நின்ற அபிமன் பார்க்கிறான்.  ஒரு கணையால் அந்த மலையையே தூள்தூளாக ஆக்குகிறான்.  வீமன் பின்னர் ஒரு வேல் எடுத்து வீசுகிறான்.  அந்த அரக்கன் மடிகிறான்.  அன்று பல அரக்கர்கள் மற்றும் மன்னர்கள் மடிகிறார்கள் வீமனின் கதையால்.  காசி மன்னனது படை மற்றும் சேதியர்கள் விசயன் வாளியால் மடிகிறார்கள்.
சூர்யா:  வாளி என்றால் என்ன தாத்தா?  வாளி என்றால் பக்கெட் என்று தான் எனக்குத் தெரியும்.
தாத்தா: வாளி என்றால் அம்பு என்று பொருளடா.  தீக்கடவுள் கொடுத்த வெண்புரவித் தேரில் வெற்றிவாகை சூடி வலம் வருகிறான் விசயன்.  வீமவிசயர்களால் துரியோதனன் படை சிதறி சின்னாபின்னமாகிறது.  வீடுமன் கோபத்துடன் வந்து பாஞ்சாலருடன் போரிடுகிறார்.  இடையில் சிகண்டி புகுந்து பாஞ்சாலரைக் காக்க வருகிறான்.  துச்சாதனன் அம்பெய்து சிகண்டியின் தேரை அழிக்கிறான்.  விசயன் வந்து பகழி வீச பகைவர்கள் புறமிடுகிறார்கள்.  இன்றைய போரிலே விராடன் இளவல் சதானிகன் மடிகிறான்.  இத்துடன் ஒன்பதாம் நாள் போர் முடிவடைகிறது.
பத்தாம் நாள் போரில் முந்தைய நாள் போலவே படை அணிவகுப்பு உள்ளது.  மாயக் கண்ணன் விசயனைப் பார்த்து இன்று வீடுமனை வானுலக அனுப்பியே ஆக வேண்டும்.  அது அவராகவே நிச்சயம் செய்து கொண்ட தினம்.  எனவே இன்று நாள் தவறாமல் அவர் கருதியே படியே நாம் அவரைக் கொல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்.  யார் தடுத்தாலும் இன்று வீடுமரை வெல்வேன் என்று உறுதியளிக்கிறான் விசயன்.

"எந்தை ஆக; துணைவர் ஆக; தனயர் ஆக; எந்தைதன் 
தந்தை ஆக; நீ உரைக்கில், யாரையும் தறிப்பன் யான்''
விசயனும் வீடுமனும் கடுமையாக மோதுகிறார்கள்.  வீடுமனுக்கு உதவியாக மன்னர் பலர் வருகிறார்கள்.  அவ்வளவு சரங்களையும் விசயன் விலக்குகிறான்.  வீமன் தண்டு (கதை) கொண்டு பலரை மாய்க்கிறான்.  இதைக் கண்ட துரியோதனன் வில்லாளிகள் பலரை அனுப்பி வீமனுடன் மோதும்படி கட்டளை இடுகிறான்.  வீடுமன் எதிரில் சிகண்டி ஒரு தேரில் வருகிறான்.  அந்த தேரில் விசயன் ஏறி போரிடுகிறான்.  ஆனால் வீடுமன் போர் செய்யவில்லை.  சிகண்டியை துச்சாதனன் தாக்குகிறான்.  சிகண்டி அஞ்சி ஓடுகிறான்.  பின் கண்ணனின் தேரில் விசயன் ஏறுகிறான்.  கண்ணனே திகைக்கும்படி பல அம்புகள் கண்ணன் மீதே பாய்கின்றன.  சிகண்டியை அழைத்து வரச் சொல்- சிகண்டியும் விசயனுமாக கணை விடுகிறார்கள் வீடுமன் மீது.  சிகண்டி வந்தவுடன் வீடுமன் போர் புரியவில்லை.  இந்நேரம் விசயனின் கணை வீடுமனின் இதயத்தைக் கிழிக்கிறது.  வீழ்கிறார் வீடுமன்.  ஆனால் பட்ட அம்பு விசயனது என்பதை உறுதி செய்து மகிழ்கிறார்.  வீடுமன் உடனே துச்சாதனனை அழைத்து துரியோதனனைக் கண்டு அவன் சொல்படி மேற்கொண்டு போர் நடத்துக எனக் கூறி வீழ்கிறார்.  வீழ்ந்தார் வீடுமர் என்றவுடன் இரு பக்கத்தினரும் போரை நிறுத்தி ஓடோடி வருகிறார்கள்.  இரு பக்கத்தினரும் நெஞ்சு உருகினார்கள். "யாரும் நெஞ்சு அழிந்தனர்கள்; யாரும் நொந்து நைந்தனர்கள்; யாரும் நின்று இரங்கினர்களே.'' .இரு பக்கத்தினரும் அழுது புலம்புகிறார்கள்.  பரிதி வடதிசை நோக்கி நகரும் போது இறந்தால் வடபுறத்தில் உள்ளமேலுலகம் போகலாம் - இல்லாவிடில் தென்புலம் போக வேண்டியிருக்கும் என்பதை உண்ர்ந்த வீடுமர் தான் பயின்ற யோகத்தின் காரணமாக உயிர் ஓடாவண்ணம் நிறுத்துகிறார்.
சூர்யா: அது என்னங்க தாத்தா சூரியன் வடக்கே போவான் என்றால் எப்படி? கிழக்கே உதிப்பான் மேற்கே மறைவான் பரிதி என்று தான் நான் கேள்விப்பட்டு உள்ளேன்.
தாத்தா: ஆமாம்டா.  ஆடிமாதம் முதல் மார்கழி வரை சூரியன் தென்திசை நோக்கிப் பயணப்படுவான்.  இதை வடமொழியினர் தட்சிணாயனம் என்று சொல்வார்கள்.  அயனம் என்றால் பாதை.  தென்பாதை என்று பொருள்.  இது தேவர்களுக்கு இரவு என்றும் அவர்கள் சொல்வார்கள்.  எனவே தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பரிதி வடதிசை நோக்கி நகரும்.  இதை உத்தராயணம் என்பார்கள்.  வடபாதை என்று பொருள்.  இது தேவர்களுக்கு பகல் பொழுது.  தேவர்களுக்கு இரவு என்று கூறப்படுகிற தென்பாதைக் காலத்தில் இறந்தால் நற்கதி இல்லை என்றும் வடபாதைக் காலத்தில் இறந்தால் உயர்கதி பெறுவர் என்றும் சொல்லப்படுகிறது.  துவக்கத்திலேயே வீடுமனின் தந்தை சந்தனு கொடுத்த வரத்தை இப்போது நினைவு படுத்திப் பார்.  நீ நினைக்கும் போது தான் உனக்கு மரணம் வரும் என்று ஒரு வரம் வழங்கியுள்ளார்.  எனவே வடபாதை வந்தபின் மரணமடையலாம் எனத் தீர்மானிக்கிறார் வீடுமர்.  சரியா? 
சூர்யா: ஆமாங்க தாத்தா.  அந்த மீனவப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வீடுமன் சபதம் எடுத்த காரணத்தால் தானே அவருடைய தந்தை இந்த வரத்தைக் கொடுத்தார்.
தாத்தா: சரிதாண்டா.  கதைக்கு வருவோம்.  வீடுமர் தன்னுடைய தலை தாழ்ந்து உள்ளது அதை உயர்த்தி வைக்கும்படி வேண்டுகிறார்.  உடனே விசயன் சரங்களைத் தொடுத்து அந்த சரங்களின் மேல் அவர் தலை நிற்குமாறு வில்வித்தை காட்டுகிறான்.  வீடுமர் சரத்தின் மீது சயனம் பஞ்ச சயனங்களினும் இனிது என்று கூறி மகிழ்கிறார்.  பின்னர் துரியோதனனை அழைத்து "நீ விரும்பியபடி கன்னனை தானைத்தலைவன் ஆக்கி போரிடுவாய்'' எனக் கூறுகிறார்.  பின்னர் பாடிவீடு திரும்பினர் அனைவரும்.  துரியோதனன் வீடுமன் விழுந்த செய்தியைக் கூற சஞ்சயனை அனுப்புகிறார்.  செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த திருதராட்டிரன் தன் மைந்தர்களுக்கு இனி அரசு என்பது உறுதி கிடையாது என்பதை தெள்ளத்தெளிவாக உணருகிறார்.  கண்ணீர் விடுகிறார்.  போர்க்களத்தில் அடுத்த நாள் தானைத் தலைவன் யார் என்ற கேள்வி எழ கன்னன் வீடுமன் கூறியவண்ணம் தன்னைத் தானைத்தலைவனாக நியமிக்கும்படி வேண்டுகிறான்.  துரியோதனன் இக்கருத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து தனக்குத் துணையாக இருக்கும்படி கன்னனை வேண்டி துரோணரைத் தலைவராக்குகிறான்.  கதிரவன் குணபால் அடைந்தான்.
சூர்யா: அது என்ன குணபால் தாத்தா?
தாத்தா: குணதிசை என்றால் கிழக்குத் திசை.  குடதிசை என்றால் மேற்குத் திசை.  குடகு மலை என்றால் மேற்கே இருக்கக் கூடிய மலை என்று பொருள்.  அது கர்நாடகத்தில் உள்ளது.  விடிந்து விட்டது பதினோராம் நாள் போர் துவங்கப் போகிறது.  வீடுமன் இல்லாத படை எழுச்சி இல்லாமல் இருக்கிறது.  வில்-யார் கூறுவதைக் கேட்போம்.
நதி இலா நாடும், தக்க நரம்பு இலா நாத யாழும், 
நிதி இலா வாழ்வும், மிக்க நினைவு இலா நெஞ்சும், வேத 
விதி இலா மகமும் போன்ற,-வீடுமன் இலாத சேனை. 
துரோணர் சகட வியூகம் வகுக்கிறார்.  திட்டத்துய்மன் கிரவுஞ்ச வியூகம் வகுக்கிறான்.  சகுதி சகாதேவனுடன் போரிடுகிறான்.  சகாதேவனோ கதையாலும் வில்லாலும் போரிட்டு சகுனியை வெல்கிறான். துரியோதனன் வீமனோடு பொருத வந்து தோற்றோடுகிறான்.  இடைமறித்து சல்-யன் வீமன் மேல் கணை தொடுக்கிறான்.  இது கண்டு நகுலன் சல்-யனுடன் போர் புரிந்து விரட்டுகிறான்.  கன்னனும் விராடனும் விற்போர் புரிகின்றனர்.  துருபதனும் பகதத்தனும் யானைப் போர் புரிகின்றனர்.
சூர்யா: யார் இந்த பகதத்தன்.  ஏற்கனவே கூறி இருக்கிறீர்கள்.  ஆனால் நினைவில் நிற்கவில்லை தாத்தா.
தாத்தா: பகதத்தன் என்பவன் பெருவீரன். இவனைத் தோற்கடிப்பது மிகக் கடினம்.  இவன் ஒரு அரக்கன்.  நரகாசுரனின் மகன்.  நரகாசுரன் யார் என்றால் திருமால் வராகமூர்த்தியாக அவதாரம் எடுத்த போது பூமி தேவிக்கு வராகத்துக்கும் பிறந்தவன்.  நரகாசுரன் தன் தாயால் மட்டுமே தனக்கு மரணம் என்று வரம் கேட்டவன்.  அதனால் தான் கண்ணன் அவதாரத்தில் உருக்குமணி திருமகள் அவதாரம்.  சத்யபாமை என்பவர் நிலமடந்தை அவதாரம்.  சத்யபாமையைத் தேரோட்டச் சொல்- கண்ணன் நரகாசுரனைக் கொல்கிறார்.  சரியா - கதைக்கு வருவோம்.  சிகண்டி வாட்போரில் சோமதத்தன் முத-யோரை வெல்கிறான்.  சிகண்டி  பதினோராம் போரில் கலக்குகிறான்.  அனைவரையும் வெல்கிறான்.  திரும்பியபுறம் எல்லாம் சிகண்டி தென்படுகிறான்.  அபிமனும் இலக்கணகுமரனும் போரிடுகிறார்கள்.  இலக்கண குமாரன் அபிமனின் வில்லை தூளாக்கி தேரைத் தவிடுபொடியாக்குகிறான்.  சினம் கொண்ட அபிமன் அவன் தேரில் ஏறி அவனைத் தூக்கிக் கொண்டு போகிறான்.  தன் மகனை அபிமன் பற்றிக் கொண்டு போவதைக் கண்டு கலக்கடைகிறான் துரியோதனன்.  சயத்திரதன் வந்து தடுக்கிறான்.  யார் இந்த சயத்திரன் என்றால் இவன் துரியோதனனின் தங்கையான துச்சளையின் கணவன்.  சிந்துதேச மன்னன் இவன்.  கன்னன் வருகிறான் தன் நண்பனின் மகனைக் காப்பாற்ற.  ஆனால் விற்போரில் அபிமன் எல்லோரையும் வென்று ஓடஓட விரட்டுகிறான்.  கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது போர்க்களம்.  இப்போது சல்-யன் வந்து தடுக்கிறான் அபிமனை.  இடைமறித்து வீமன் சல்-யனுடன் மோதுகிறான்.  மோதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் சல்-யன் தரையில் விழுகிறான்.  அபிமன், "என்னங்க பெரியப்பா - என்னுடன் சல்-யன் மோதும் போது நீங்கள் இடைமறித்துப் போர் புரிகிறீர்களே?  எனக்கு இது அவமானமல்லவா?'' என்று கேட்கிறான்.  இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தைப் பயன்படுத்தி துரியோதனனின் மகன் தப்பி ஓடுகிறான் அங்கிருந்து.  இலக்கணக் குமாரனை கிருதவர்மன் காப்பாற்றி கொண்டு செல்கிறான்.  துரியோதனனும் போர்புரிய மாட்டாமல் திகைக்கிறான்.  அருக்கன் குடபால் முந்நீர் குளிக்கிறான்.
சூர்யா:  அது என்னங்க தாத்தா முந்நீர்.  வெந்நீர் என்றால் தெரியும் - தண்ணீர் என்றால் தெரியும்.
தாத்தா: முந்நீர் என்றால் கடல்டா.  மழைநீர் - ஆறுகள் கலப்பதால் அந்த நீர் - கடந்நீர் இப்படி மூன்றுவகையான நீர் அங்கே உள்ளது.  அதனால் அதை முந்நீர் என்று கூறினார்கள் தமிழர்கள்.  காரணப்பெயர்.  இப்போ கடல் என்ற சொல்லைக் கூட நாம் மறந்து விடுகிறோமே.  என்னவோ சீஷோர் என்கிறார்கள் போக்கற்றவர்கள்.  ஆங்கிலேயனுக்குப் பிறந்தவர்கள் போல தமிழில் ஆங்கிலம் கலந்து தமிங்கலீசு பேசும் வழக்கம் பெருகி விட்டது.  ஊடகங்களுக்குக் கூட சன்டிவீ போன்று ஆங்கிலப் பெயரே உள்ளது நம் தமிழ்நாட்டில்.  தமிழுக்கு இங்கு ஏதடா இடம்?  பெயரில் தான் தமிழ் இருக்கும்.  ஆனால் பேசுவது ஆங்கிலம்.  ஆங்கிலம் பால் அடக்கமுடியாத மோகம்.  என்று தீருமோ எந்த மோகம். புரியவில்லை.  சரி கதைக்கு வருவோம்.  பாடிவீட்டில் துரியோதனனுக்கு தாங்கொணாக் கோபம்.  தன் மகனை தூக்கிச் சென்றார்களே.  நாளை தருமனைப் பிடிக்க வேண்டும்.  அப்போது தான் என் புதல்வனைப் பற்றிச் சென்ற கோபம் அடங்கும் என்று உடன் இருந்த மன்னர்களிடம் கூறினான்.  திகத்தராசன் என்ற அரசனும் மற்றவரும் வீமனையும் விசயனையும் தருமனை நெருங்காமல் பார்த்துக் கொண்டால் மற்றவர்கள் ஒன்று சேர்ந்து தருமனை வளைத்துப் பிடித்துவிடலாம் என்று கருத்து கூறுகிறார்கள்.'சகத்துக்கு ஒருவன் எனும் விசயன் தம்முற்கு உதவி செய்யாமல் மகத்தில் சனிபோல் வளைக்குவம் யாம்!' என்றனர் அரசர்கள் அனைவரும்.  திகத்தராசன் என்பவன் இராசபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவன். 
சூர்யா: மகத்தில் சனி என்றால் என்னங்க தாத்தா?
தாத்தா: கட்டமான நேரம் என்று பொருள்.  சுந்தரமூர்த்திநாயனாருக்கு வாக்கு தவறியதால் இரு கண்களும் போய்விடும். அப்போது அவர் சொல்லுவார்
"மகத்திற்புக்கதோர்சனியெனக்கானாய் மைந்தனே மணியே மணவாளா, வகத்திற்பெண்டுகள் நானென்று சொன்னா லழையேற்போ குருடா வெனத்திரியேன், முகத்திற்கண்ணிழந் தெங்ஙனம்வாழ்கேன் முக்கணா முறையோ மறையோ தீ, யுகைக்குந்  தண்கடலோ தம்வந் துலவுமொற்றியூரெனுமூருறைவானே"அடையார்தமக்கு,மகத்திற்சனியன்னசந்திரவாணன்" என்ற தஞ்சைவாணன் கோவையிலும்  வரும்.  அதாவது மக நட்சத்திரத்தில் பிறந்தவன் சனி தசை நடக்கும் போது மரணம் வரும்.  அல்லது மரணத்திற்கு ஒப்பான இன்னல் வரும் என்று சொல்லுவார்கள்.  அது மட்டுமல்ல சனி மகத்தில் சஞ்சரிக்கும் போது சில அரசுகளுக்கு ஆகாது என்று கூட சொல்லுவார்கள்.  மகம் என்பது நட்சத்திர வரிசையில் பத்தாவது நட்சத்திரம். ஒரு நட்சத்திரத்தை நான்கு பங்காகப் பிரிப்பார்கள்.  அதை வடநூலார் பாதம் என்று கூறுவர். இப்படிக் கணக்கிட்டால் 108 பாதங்கள் மொத்தம் 27 நட்சத்திரங்களுக்கு.  இதை 12 இராசிகளுக்குப் பிரித்தால் ஒவ்வொரு இராசிக்கும் 9 பாதங்கள் வேண்டும்.  மகம் என்பது பத்தாவது நட்சத்திரம் என்றால் 37 வது பாதம் முதல் 40வது பாதம் வரை இதற்கான பாதங்கள்.  36 பாதம் வரை உள்ள நட்சத்திரங்கள் மேடம், ரிடபம், மிதுனம் என மூன்று இராசிகளில் வரும்.  நான்காவது இராசியான சிம்ம இராசிக்கான நட்சத்திரம் இது.  மகமும், பூரமும் உத்தரத்தில் ஒரு பாதமும் சிங்கராசியை வீடாகக் கொண்டவை. சிங்கம் என்பது சனிக்குப் பகை வீடு.  சனி என்பவன் நவக்கிரகங்களில் ஒருவன்.  உத்தர நட்சத்திரத்தில் உதித்த சூரியனது மகன். இவன்.  விசயனும் பங்குனி உத்திரத்தில் பிறந்தவன்.  அதனால் விசயனுக்கு பல்குணன் -பற்குணன் என்ற பெயரும் உண்டு. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அங்கு சனி வரும் போது ஏழரைநாட்டுச் சனி என்று ஆகிவிடும்.  அது பெருந்துன்பத்தை விளைவிக்கக்கூடிய காலம் என்று சோதிட வல்லுநர்களால் கருதப்படுகிறது. இருக்கும் இடத்தை விட்டு மாறவேண்டி இருக்கும்.  மரணம் நிகழலாம்.  அல்லது மரணத்திற்குச் சமமான அவமானங்களைச் சந்திக்க நேரிடும்.  எனவே அப்படிப்பட்ட துன்பத்தை நாம் விசயனுக்குத் தருவோம் என்று அரசர்கள் கூறுவதாக வில்-யார் கூறி தன் சோதிட வல்லமையை நமக்குப் புலப்படுத்துகிறார்.  சரியா?  எல்லோரும் உறங்கப் போகிறார்கள். அடுத்த நாள் பன்னிரண்டாம் நாள் போர் நடக்க உள்ளது.  சூர்யா நாமும் உறங்கலாமே?

No comments:

Post a Comment