Thursday, November 11, 2010

MAHABHARATH STORY - PANDAVAS HIDE IN VIRAT KINGDOM

PRAISE YOUR MOTHER TONGUE - SPEAK IN MOTHER TONGUE - PRAY IN MOTHER TONGUE


தாத்தா:  நேற்று அறக்கடவுள் ஐவருக்கும் நடத்திய சோதனையைக் கண்டோம்.  எப்படி ஐவரையும் ஒழிக்கவென்றே துரியோதனனால் வேள்வி மூலம் படைக்கப்பட்ட பூதத்தினிடமிருந்து ஐவரும் தப்பினார்கள் என்பதையும் கேட்டோம்.  இன்று அதன்பிறகு நடைபெற்ற கதையைப் பார்ப்போம்.  துர்வாச முனிவர் என்று முற்காலத்தில் ஒரு முனிவர் இருந்தார்.  இந்த முனிவர் முனிந்து கொள்வதையே தொழிலாகக் கொள்வார்.  சினந்து கொள்வதில் சிறந்தவர்.  இவர் சினந்தால் உடனே சாபம் கொடுத்து விடுவார்.  ஏற்கனவே நான் சொல்- இருக்கிறேன்.  திருமா-ன் வாயிற்காப்போர்களான சயனையும் விசயனையும் இவர் சபித்ததால் தான் அவர்கள் இரண்யன்-இரண்யாட்சகன், இராவணன்-கும்பகன்னன், கமசன்-சிசுபாலன் என்று அவதாரம் எடுத்தார்கள் என்று சிசுபாலன் கதை வந்த போது கூறியிருக்கிறேன்.  அந்த முனிவர் தான் துர்வாசர்.  துரியோதனனுக்கு வேள்வியில் இருந்து வந்த பூதத்திடமிருந்தும் ஐவர் தப்பிவிட்டனர் என்ற தகவல் வருகிறது.  உடனே அடுத்த திட்டத்தைத் தீட்டுகிறார்கள் துரியோதனன்-கன்னன்- சகுனி ஆகியோர்.  இந்த நேரத்தில் அங்கே வருகிறார் துர்வாசர்.  அவரை நன்றாக மகிழ்விக்கிறான் துரியோதன்.  மகிழ்ச்சி அடைந்த துர்வாசர் "உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் தருகிறேன்'' என்று சொல்கிறார். தான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்ததைவிட பாண்டவர்கள் கெட்டுப்போக வேண்டும் என்று அல்லும் பகலும் அனவரதமும் எண்ணிக் கொண்டிருப்பவன் இந்த துரியோதனன்.  எனவே இங்கிருந்து நீங்கள் நேரடியாக பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று விருந்துண்ண வேண்டும்.  அதுவே என் விருப்பம் என்றார்.  அவன் நினைப்பு என்னவென்றால் இந்த துர்வாச முனிவர் ஒரு முனிவர் குழாமோடு தான் எல்லா இடத்திற்கும் செல்வார்.  இப்படி அந்தக் குழுவுடன் சென்றால் பாண்டவர்கள் காட்டில் வசிப்பதால் இவர்களுக்கு முறையாக உணவு படைக்க முடியாது.  அதனால் இவரது சாபத்தைப் பெற்று அழிந்து விடுவார்கள் என்று எண்ணினான்.  அதனால் முனிவர் வரம் தருவதாகக் கூறியவுடன் உடனே இந்த வேண்டுகோளை விடுத்தான்.   வில்-யார் இவரை இந்த நேரத்தில் அறிமுகம் செய்யும் போதே " வளரும் தவத்தாலும்,
கோபத்தாலும், பேர் படைத்த கொடிய முனிவன் துருவாசன்'' என்று அறிமுகம் செய்கிறார். அவரும் ஒப்புக் கொண்டார்.  அவர் வந்தவுடனேயே தருமர் அவருக்கு உரிய மரியாதையைச் செய்து அருகிலுள்ள நதிக்குச் சென்று நீராடி வரும்படியும் வந்தவுடன் விருந்துண்ணலாம் என்றும் வேண்டினார்.  தருமருக்கு தன்னிடம் உள்ள வற்றாத உணவு வழ்ங்கும் பாத்திரம் உதவும் என்ற நம்பிக்கை.  முனிவரை அனுப்பி விட்டு திரௌபதியிடம் இந்த விடயத்தைக் கூறினார்.  அப்போது தான் அட்சய பாத்திரத்தில் உள்ள குறை ஒன்று தெரிந்தது.  வீட்டில் உள்ளோர் அனைவரும் உண்டு முடித்து பாத்திரத்தைக் கழுவிவிட்டால் பிறகு அது அடுத்த உணவு வேளையின் போது தான் உணவு வழங்கும் என்ற விபரம் தருமருக்குத் தெரிந்தது.  எல்லோரும் கூடி விவாதித்தார்கள்.  பீமன், "எப்படியும் வந்து சாபம் கொடுத்து நாம் அழியப் போகிறோம். அதற்குள் எதிரிகளை ஒழித்துவிட்டு வந்து விடுகிறேன்.'' என்றான்.  நகுலசகாதேவர்கள் தருமரிடம் தங்கள் கருத்தைச் சொல்கிறார்கள்.  கண்ணனை அழைத்தால் இதற்கு நல்ல வழிகாட்டுவார் என்று அவர்கள் கூறினார்கள்.  கண்ணனை அழைத்தால் கவலை நீங்கும் என்பது அவர்கள் நம்பிக்கை.  தருமரும் இதற்கு இசைகிறார்.  திரௌபதியோ பயந்து நடுங்குகிறாள்.  தருமர் கண்ணனை நினைத்தார்.  உடனே வந்தார் கண்ணன்.  நெஞ்சுருக நினைத்தால் உடனே வருவான் கண்ணன்.  விபரத்தை அவரிடம் கூறினார்கள்.  "அட்சயபாத்திரத்தில் ஏதாவது ஒட்டிக்கிடக்கிறதா?  சரியாகக் கழுவி இருக்கமாட்டாய் திரௌபதி அந்த பாத்திரத்தை.  ஒரு தடவை பார்த்துவிட்டு ஏதாவது இருந்தால் உடனே கொண்டுவா'' என்றார்.  உடனே திரௌபதி விரைந்தாள்.  பாத்திரத்தைப் பாத்தால் கண்ணன் சொன்னது போல் ஒரு பருக்கை ஒட்டிக்கிடந்தது.  ஒரு கீரையின் பகுதியும் இருந்தது.  உடனே கொண்டு வந்தாள்.  அதை எடுத்துக் கண்ணன் உண்டார்.  இவர் உணவருந்தினால் உலகமே உண்ட மாதிரிதான்.  உடனே குளித்துக் கொண்டிருந்த துர்வாசருக்கும் அவருடன் வந்திருந்த அனைவருக்கும் உணவு அருந்திய உணர்வு பொங்கியது.  ஏப்பமும் விட்டார்கள்.  அதனால் தான் நாம் எப்போது உணவு அருந்த அமர்ந்தாலும் " நான் உண்ணும் இந்த உணவு உனக்குப் படைக்கப்பட்டதே'' என்று கூறி உணவு அருந்த வேண்டும் என்று சொல்கிறார்கள்.  அவ்வாறு மனதார நினைத்துப் படைத்தால் - நமது வேண்டுகோள் ஒருவேளை கண்ணன் செவிக்கு எட்டினால் - உலகத்தினர் அனைவருக்கும் நாம் உணவு அளித்தது போல் ஆகிவிடும்.  முனிவர் திரும்பி வருகிறார்.  வந்த காரணத்தை உரைக்கிறார்.  உண்மையை மறைக்கவில்லை அந்த முனிவர்."அறத்தின் மகனே - உன்னை அரசு என்று ஏற்றுக் கொண்டோர் அல்லால் எதிர்ந்தவர் யாராவது வாழமுடியுமா இந்தக் குவலயத்தில்.  கேதனன் தன் நிலையத்தில் விருந்து ஒன்று கொடுத்து ஒரே ஒரு வேண்டுகோள் தான் விடுத்தான்." எம் இல் துய்த்த ஓதனம் போல் எம்மோடு இக- வனம் புகுந்தோர்தம் இல் சென்று நாளை நுகர்.  இதுவே எனக்குத் தரும் வரம்'' என்று வேண்டினான்.  எனவே தான் நான் வந்தேன்.  அறம் வென்றது.  வாய்மை வென்றே விட்டது என்று பாராட்டிவிட்டுச் சென்றுவிட்டான்.
அடுத்து திரௌபதியின் ஆசையின் காரணமாக மீண்டும் ஒரு ஆபத்தை காட்டில் சந்திக்கிறார்கள் ஐவர்.  ஏற்கனவே பூ ஒன்று வேண்டும் என்று கேட்டு வீமனை அனுப்பி இறைஅருளால் அவன் திரும்பிய கதை நமக்குத் தெரியும்.  இப்போது காட்டில் ஒரு நெல்-க்கனியைக் கண்டாள்.  அது அமித்திர முனிவனின் குடி-ல் இருந்தது.  அமித்திர முனிவன் அந்த நெல்-க்கனியை உண்டு தான் தவம் செய்து கொண்டிருந்தான்.  இதை அறியாமல் அந்தக் கனி வேண்டும் என்று கேட்டாள் திரௌபதிகேட்டவுடன் விசயன் கணை கொண்டு அந்தக் கனியை வீழ்த்தினான்.  அந்த கானகத்தில் இருந்தோர் அந்த நெல்-க் கனியின் மகத்துவத்தைக் கூறுகிறார்கள்.  ஆண்டுக்கு ஒரு முறை அந்த மரத்தில் இந்த கனி காய்க்கும் என்றும் இதை மட்டுமே அந்த முனிவர் உண்டு தன் பசியைப் போக்கிக் கொண்டு இறைவனை நோக்கி மீண்டும் தவம் புரிவார் என்றும் கூறுகிறார்கள்.  "முனிவன் வந்தால் என்ன நடக்குமோ - தெரியவில்லை'' என்று பதறுகிறார்கள் மற்ற தவயோகிகள்.  உடனே விசயன் நடந்ததை தன் அண்ணன் தருமரிடம் சென்று உரைக்கிறான்.  உபாயத்தைப் பற்றி யோசிக்கையில் விசயன், "முனிவர் சபித்தால் என்னைத் தான் சபிப்பார்.  எனவே நீங்கள் அச்சப்பட வேண்டாம்'' என்று கூறினான். தருமரோ, "உனக்கு இடர் வர, நாங்கள் உன்னை நீங்கிப் போய் பிழைக்கக் கருதுவோமோ.  இது நடக்காத செயல்'' என்று கூறுகிறார்.  மீண்டும் உதவிக்கு வருகிறார்கள் நகுலசகாதேவர்கள்.  கண்ணனை அழைப்போம் அவர் வழிகாட்டுவார் என்கிறார்கள் இருவரும்.  துரௌபதியோ இந்தத் துன்பத்திற்குத் தான் காரணமாகி விட்டதை நினைத்து வருந்துகிறாள்.  நகுலன் கூறியபடி தருமர் கண்ணனைச் சிந்திக்க  அவர் வந்து உபாயம் ஒன்றைக் கூறுகிறார்.  "இப்போது நீங்கள் என்ன கருதினீர்களோ அதை ஒளிக்காமல் உள்ளது உள்ளபடி சொன்னால் இந்தக் கனி மீண்டும் அந்த மரத்தில் போய் சேர்ந்துவிடும்'' என்கிறார் கண்ணன்.  இந்தக் காட்சி மூலம் ஐவரும் எப்படிப்பட்டவர்கள் - அவர்களின் குணநலன் என்ன? - திரௌபதியின் எண்ணம் என்ன? என்பதெல்லாம் நமக்குப் புலப்படும்.  தருமன், "அறம் வெல்ல வேண்டும். மெய்ம்மை வெல்ல வேண்டும்.  பொய்ம்மொழி மற்றும் கோபம் என்பவை பாவம் ஆகும்.'' என்று எண்ணியதாகக் கூறுகிறார். வீமனோ ," பிறர் மனைவியை அன்னை என்று நினைக்க வேண்டும்.  பிறர் பொருளை எட்டி என்று எண்ண வேண்டும்.  பிறரை வசைபாடுதலை பெருமை என்று நினைக்கக் கூடாது.  பிறர் துயரை என் துயர் போல் நினைக்க வேண்டும்.  இறுதிவரை இந்த எண்ணம் மாறாமல் இருக்க வேண்டும்'' என்று நினைத்ததாகக் கூறினான்.  மானத்தை எப்படியேனும் காக்க வேண்டும் என்று எண்ணினேன் என்றான் விசயன். நகுலசகாதேவர்கள் தருமரின் வழியில் நடக்க வேண்டும் எனவும் கண்ணன் காட்டும் வழியே சிறந்த வழி என்று நினைத்ததாகவும் கூறினார்கள்.  இறுதியில் திரௌபதியின் முறை வருகிறது. "ஐம்புலன்கள் போல் ஐந்து பதிகள் உள்ளார்கள்.  அப்படி இருந்து ஆறாவதாக இன்னொரு கணவன் அமையமாட்டானா என என் மனம் விரும்பும்.'' என்றாள் திரௌபதி.  அறுவரும் பொய் சொல்லாமல் நினைத்ததை அப்படியே சொன்ன காரணத்தினால் அந்தக் கனி பண்டு போல மரத்தில் போய் உடனே பொருந்திற்று.  இப்படியாக அனைவரும் அமித்திர முனிவரின் கோபத்தில் இருந்து தப்பினார்கள்.  பின்னர் எப்படி கரந்துறைவது என்று ஐவரும் ஆலோசித்தார்கள்.  கரந்து உறைவதற்கு உரிய இடம் எது என்று யோசித்த போது விசயன் விராடன் நகரமே இதற்குச் சரியான இடம் என்று தனது கருத்தை வ-யுறுத்தினான்.   பின்னர் தருமர் தன்னுடன் வந்திருந்த அரசர்களையும் முனிவர்களையும் வணங்கி அவரவர் இடத்திற்குச் செல்லும்படியும் தாங்கள் கரந்து உறைய வேண்டிய தருணம் என்பதால் யாரும் உடன் இருக்கக் கூடாது என்று கூறினார்.

சூரியா: கரந்து உறைதல் என்றால் என்ன தாத்தா?  கறத்தல் என்றால் பால் கறத்தல் என்று எனக்குத் தெரியும்.  இந்த கரத்தல் என்ன தாத்தா?

தாத்தா: கரந்து உறைதல் என்றால் மறைந்து வாழ்தல் என்று பொருள்.  அஞ்ஞாதவாசம் என்று வடமொழிக்காரர்கள் கூறுவார்கள்.  இது நல்ல தமிழ்ச் சொல்.

சூர்யா: தாத்தா நீங்க சொல்ற இந்த வில்-பாரதத்திலே பல வடமொழிச் சொற்கள் அருமையாக தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.  இதை நாம் படிக்காமல் பீஷ்மர், கிருஷ்ணன், திருதராஷ்டிரன், பீமன், நகுஷன் இன்னும் இது போல பல பெயர்களை நாம் தமிழில் சேர்த்து நல்ல தமிழைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம்.  தமிழ்ச் சொல் எவ்வளவு உள்ளன இந்த காவியத்தில்.  இதையெல்லாம் படிக்கவும் - கேட்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் தாத்தா.  ஒரே சொல்லுக்கு எவ்வளவு இணைச் சொற்களை அடுக்குகிறார் இந்த வில்-புத்தூரார்.  மிக நன்றாக உள்ளது தாத்தா.

தாத்தா: புரிஞ்சா சரி.  வடமொழிச் சொற்களை உபயோகித்தால் பொருள் அறிந்து உபயோகிக்க வேண்டும்.  நமக்கு வடமொழியும் சரியாகத் தெரியாது.  தமிழும் சரியாகத் தெரியாது.  ஆங்கிலமும் சரியாகத் தெரியாது.  எல்லாவற்றையும் கலந்து பேசக் கற்றுக் கொண்டோம்.  இறுதியில் அனைத்து மொழிகளையும் கொலை செய்த பாவம் நமக்கு வரும் தெரியுமா?  உதாரணமாக ஆறு என்று தமிழ் சொல்லைப் பயன்படுத்தினால் அதற்குப் பொருள் செல்லும் வழி என்பதாகும்.  எனவே வைகையாறு என்று சொல்கிறோம் - காவிரியாறு என்று சொல்கிறோம்.  ஆனால் காவிரி நதி என்று சொன்னால் நதியின் கதை நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.  நதி என்றால் கிழக்கில் பாயும் ஆறு.  வேறு திசையில் பாய்ந்தால் அதற்கு நதம் என்று பெயர்.  ஆனால் நாம் எல்லா ஆறுகளையும் நதி என்று பொத்தாம்பொதுவாகக் கூறுவோம். வடமொழிச் எழுத்துக்களை வேறுவழி இல்லாமல் தமிழ் மொழியில் பயன்படுத்த நேர்ந்தால் எப்படி மொழிமாற்றம் செய்ய வேண்டும் என்று இலக்கணத்தில் விதி உள்ளது.  அதை அறிந்து பயன்படுத்த வேண்டும்.  இந்த காவியத்தின் ஆசிரியர் வடமொழி மற்றும் தமிழ்மொழி இரண்டிலுமே வல்லவர்.  அதனால் தான் முறையாகப் பெயர்களை மொழிமாற்றம் செய்துள்ளார்.  சில கருத்துகளையே அவர் ஏற்பதில்லை.  வடமொழி வியாச மகாபாரதத்தில் உள்ள பல கருத்துகளோடு இவர் ஒத்துப்போகவில்லை.  ஏற்றுக் கொள்ளவில்லை.  அதனால் தான் பிராமணன் யார் போன்ற இனப்பிரிவுகள் குறித்து வந்த கேள்விகளைத் தவிர்த்து விட்டார்.  நாம் நச்சுப்பொய்கைக் கதையில் பார்த்தோமே.  பல கேள்விகள் வடமொழிக் காவியத்தில் உள்ளன.  ஆனால் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள வில்-புத்தூரார் விரும்பவில்லை.  காரணம் தமிழ்க் கலாசாரம் அவருக்குத் தெரியும்.  வடபுலக் கலாசாரத்தை இங்கு திணித்து சீரழிக்க விரும்பவில்லை அவர். அதனால் தமிழ் இலக்கியங்களை-இலக்கணத்தை முறையாகக் கற்று - நல்ல தமிழ்ப் பாடல்கள், கவிதைகள், காவியங்கள் ஆகியவற்றைப் படித்தால் பல தமிழ் சொற்கள் நமக்குத் தெரிய வரும்.  அவற்றை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.  ஒருசில தமிழ் சொற்கள் தெரிந்ததோடு நிற்கக் கூடாது.  பல புதுச் சொற்களை அறிந்து கொள்ள வேண்டும்.  அது நமக்கும் நல்லது மொழிக்கும் நல்லது.  தமிங்கிலுசு எழுதுவதை - பேசுவதை புறக்கணிக்க வேண்டும். சரி நாம் பாரதக் கதைக்கு வருவோம்.
விராட நகருக்குச் சென்று கரந்து உறைவது என்று முடிவெடுக்கப்பட்டவுடன் ஒவ்வொருவராக அங்கு பல்வேறு பணிகளில் சேர்வது என முடிவெடுக்கிறார்கள்.  விராட நகர் அடைந்ததும் எல்லையில் இருந்த மயான பூமியில் இருந்த ஒரு காளி கோயி-ன் முன்னே உள்ள வன்னி மரத்திலே தங்கள் ஆயுதங்களை மறைத்து வைத்து காளி அன்னையைத் துதித்துச் செல்கிறார்கள்.  தருமர் கங்கன் என்னும் பெயருடைய துறவியாய் செல்கிறார்.  வீமன் பலாயனன் என்னும் பெயரில் விராடனது தலைமை மடையனாய்ப் பணியில் சேருகிறான்.  மடை என்றால் சமையல் கூடம்.  திருக்கோவில்களில் மடைப்பள்ளி என்று இருக்கும்.  இறைவனுக்குப் படைக்கப்படும் உணவுகளைச் சமைக்கும் கூடத்திற்குத் தான் மடைப்பள்ளி என்று பெயர்.  உருப்பசி மூலம் தனக்குக் கிடைத்த சாபத்தைப் பயன்படுத்தி விசயன் ஒரு பேடியாக மாறி பிருகந்நளை என்ற பெயருடன் வந்து அரசகுமாரி உத்தரையின் பாங்கியாகச் சேர்தல்.  நகுலன் தாமக்கிரந்தி என்னும் பெயரில் விராட மன்னனின் குதிரைகளைப் பராமரிக்கும் பணியில் அமர்கிறான். சகாதேவன் தந்திரிபாலன் என்னும் பெயரோடு ஒரு இடையனாக வந்து விராடனின் ஆநிரை காப்போருக்கு அதிபதியாக அமர்கிறான்.  இறுதியில் திரௌபதி விரதசாரிணி என்னும் பெயருடன் விராட அரசியின் வண்ண மகளாகப் பணியில் சேருகிறாள்.

சூர்யா: அது என்னங்க தாத்தா வண்ணமகள்?  நான் கேள்விப்பட்டதே இல்லையே?  அப்படி என்றால் என்ன வேலை செய்யணும்?

தாத்தா:  அரசிக்கு ஒப்பனை புனைதல் பணி.  அலங்காரம் செய்தல் என்றும் கூறலாம்.

சூர்யா: ப்யூட்டி பார்லர் வேலை மாதிரியா தாத்தா?

தாத்தா: ஆமாம்டா ஆமாம்.  ஆங்கிலத்தில் சொல்லாதே என்றால் கேட்க மாட்டேன் என்கிறாயே.  ஏன் அழகுபடும் வேலை என்று சொல்ல வேண்டியது தானே?

சூர்யா: சரிங்க தாத்தா.

தாத்தா: பாண்டவர்கள் மறைந்து உறைந்த காரணத்தால் விராட நகரம் எப்போதும் இல்லாத வகையில் செழிக்கத் துவங்கியது.  நாடு செழித்த காரணத்தால் வீர விளையாட்டுகள் சிறப்படைந்தன.  இந்த நேரத்தில் வாசவன் என்று ஒரு மற்போர் வீரன் பல மல்லர் சூழ விராட நாட்டுக்கு வந்து தன்னுடைய பெருமையைக் கூறுகிறான்.  விராடனும் தனது மல்லர் குழுவை நோக்க அவர்கள் ஒவ்வொருவராக வந்து வாசவனுடன் வந்து மோதுகிறார்கள்.  அனைவரும் தோற்கிறார்கள்.  அவனுக்குச் சிறப்பு செய்கிறார் மன்னர்.  அப்போது கங்கர் விராட மன்னரிடம் "நின் மடையர் தலைவன் பலாயனன் நல்ல மல்லன்.  அவனை இந்த வாசவனோடு மோதச் சொல்.  அவன் இவனை வென்றுவிடுவான்'' என்று கூறுகிறார்.  அவரும் தலைமை மடையனை வரச்செய்து விடயத்தைக் கூறுகிறார்.  அவனும் வாசவனோடு மோதி வென்றுவிடுகிறான்.  மன்னர் அவனைப் பாராட்டி பரிசுகள் பல வழங்குகிறார்.  சிறிது நாள் கழித்து விராட அரசனின் உடன்பிறப்புகள் முன்னவன் கீசகனோடு அங்கு வருகிறார்கள்.  தங்கள் தமக்கையைக் கண்டு அளவளாவுகிறார்கள்.  அவர்கள் மொத்தம் 105 பேர்.  விராட மன்னனின் மனைவி பெயர் சுதேட்டிணை.  அரசியைக் கண்டு திரும்பும் போது கீசகன் விரதசாரிணியைக் கண்டு காமம் கொள்கிறான்.  விரதசாரிணி அவனை பழித்துப் பேசி பயமுறுத்திப் பேசுகிறாள்.  அறிவுரை சொல்கிறாள்.  அவன் கேட்பதாயில்லை.  விரதசாரிணி அரசி சுதேட்டிணையிடம் விபரத்தைச் சொல்கிறாள்.  அவள் தனது தம்பியை அழைத்துக் கடிந்து இனி அந்தப்புரத்திற்கு வரக்கூடாது என ஆணையிடுகிறாள்.  ஆனால் கீசகன் விரகதாபத்தில் துடிக்கிறான்.  சேடியர் மூலம் செய்தியைக் கேட்ட அரசி ஒரு பூமாலையைக் கொடுத்து அதை அவனிடம் சேர்ப்பிக்கும்படி விரதசாரிணியிடம் கூறுகிறாள்.  அங்கு சென்ற அவளை அடைய கீசகன் திட்டமிடுகிறான்.  உடனே சூரியக் கடவுளிடம் முறையிடுகிறாள் விரதசாரிணி.  கீசகனுக்கோ விரதசாரிணியைக் கண்டவுடன் கொண்டாட்டம். வந்தனள், என்னுடை மா தவப் பயன்!                       வந்தனள், என்னுடை வழிபடும் தெய்வம்!                        வந்தனள், என்னுடை ஆவி! வாழ்வுற,                         வந்தனள், என்னுடை வண்ண மங்கையே!  என்று சொல்-க் கொண்டு கீசகன் பற்றுவதற்கு ஓடி வந்தவுடன் விரதசாரிணி அரசவைக்கு ஓடி வருகிறாள்.  அங்கும் வந்து அவள் கையைத் தீண்ட நினைக்கவே சூரியன் ஏவலால் ஒரு கிங்கரன் வந்து அவனை புறத்தே எடுத்து வீசுகிறான்.  ஆனால் விராடன் கீசகன் செயலைக் கண்டியாது வாளாவிருந்தான்.  மாறுவேடத்தில் இருந்த வீமனான பலாயனனுக்குக் கடுங்கோபம். வெகுண்டான்.  கங்கர் வேடத்தில் இருந்த தருமர் தடுத்தார்.  அன்று இரவே கீசகனைக் கொல்வது என பலாயனன் முடிவெடுக்கிறான்.  அப்போது பாஞ்சா- நாம் மறைந்து வாழ்கிறோம்.  மறைந்து வாழும் காலம் முடிவடைய சில தினங்களே உள்ளன.  எனவே மேலும் இரு நாட்கள் பொறுக்க வேண்டும்.  அதற்குள் நான் அவனைச் சந்தித்து ஒப்புக்கொள்வது போலப் பேசி ஒரு மறைவிடத்திற்கு இரண்டு நாள் கழித்து வரச் சொல்கிறேன்.  அங்கு வைத்து அவனை வதைக்கலாம் என்று கூறுகிறாள்.  பலாயனனும் சம்மதிக்கிறான்.  அதேபோல மறைவிடத்திற்கு வருகிறான் கீசகன் மிக்க மகிழ்ச்சியுடன்.  அங்கு காத்திருந்த வீமன் அவனோடு போரிட்டுக் கொல்கிறான்.  சண்டை ஒ- கீசகனின் உடன்பிறப்புகளுக்குக் கேட்டு அவர்களும் ஓடி வருகிறார்கள்.  அவர்களையும் மாய்க்கிறான் பலாலயன்.  பின்னர் அவர்கள் தத்தம் இடத்திற்குத் திரும்புகிறார்கள்.  விடிகிறது.  கீசகனும் அவனது தம்பியரும் மாண்ட செய்தி காட்டுத்தீ என பரவுகிறது.  இந்தச் செய்தி துரியோதனனுக்கும் எட்டுகிறது.  கீசகனை வெல்ல எல்லோராலும் முடியாது.  ஒருவேளை ஐவரும் இந்த நகரில் பதுங்கி இருக்கலாம் என்று கருதுகிறான் கன்னன்.  எனவே திரிகர்த்தன் என்னும் மன்னனின் தலைமையில் படையை அனுப்பி அந்நாட்டு நிரையைக் கவர்ந்து செல்கிறார்கள். தகவல் அறிந்த விராடன் தடுத்துப் போரிடுகிறான்.  ஆனால் படைபலத்துடன் வந்த திரிகர்த்தன் விராடனின் படையை ஓடஓட விரட்டி விராடனைத் தன் தேரில் கட்டுகிறான்.  கங்கர் பலாலயனுக்குத் தகவல் கொடுத்து ஆணையிட அவன் வந்து விராடனை மீட்டு அனைவரையும் விரட்டுகிறான்.  தாகக்கிரந்தி (நகுலன்) பகைவர்களின் குதிரைகளைக் கவர்ந்து வருகிறான்.  தந்திரிபாலன் (சகாதேவன்) ஆநிரைகளை மீட்டு வருகிறான்.  பலாயனன் திரிகர்த்தனை தேரில் கட்டிப் போடுகிறான்.  கங்கர் வந்து அவனை விடுவிக்கும்படியும் அப்போது தான் இவன் வந்த பின்னணி தெரியும் என்றும் கூறுகிறார்.  திரிகர்த்தன் ஓடிப்போய் துரியோதனனிடம் நடந்ததைத் தெரிவிக்கிறான்.  உடனே படைகளுடன் துரோணர், வீடுமர், துரியோதனன், கன்னன், அசுவத்தாமன் ஆகியோர் வீராட நகரை முற்றுகையிடுகிறார்கள்.  இவர்கள் வரும் செய்தி ஆயர்கள் மூலம் அரசிக்குத் தெரிகிறது.  அரசரோ ஏற்கனவே படைகளுடன் சென்று உள்ளார்.  தகவல் எதுவும் இல்லை.  என்ன செய்வது என்று யோசித்து "நகர் காமின்'' என்று மகளிருக்கு உத்தரவிடுகிறாள் அரசி சுதேட்டிணை. உத்தரன் தன் தாயை வணங்கி தன் தேருக்குச் தேரோட்டி ஒருவன் இருந்தால் தான் நகரத்தைக் காப்பதாகக் கூறுகிறான்.  வண்ணமகள் உடனே அரசியிடம் பேடிக்குத் தேர் ஓட்டத் தெரியும்.  எனவே அந்த பேடியை உத்தரனுடன் அனுப்பலாம் என்று கூறுகிறாள்.  அரசியின் கட்டளையை பேடியும் ஒப்புக்கொள்கிறாள்.  தேரோட்டிச் செல்கிறார்கள்.  ஆனால் சேனையைக் கண்டதும் உத்தரன் நடுங்கிச் சோர பேடி பிருகந்நளை அவனைத் தேற்றி ஆறுதல் கூறுகிறாள்.  ஆனால் உத்தரன் மீள வேண்டும் என வம்பு செய்கிறான்.  ஆனால் பேடியோ "நான் அவர்களுடன் பொருது பகையை வெல்வேன் அஞ்சற்க''என்று  சொல்லுகிறாள்.  உத்தரன் ஓடப் பார்க்க அவனை தேரில் கட்டிப்போட்டுவிட்டு தான் காளி கோவில் அருகில் ஒளித்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு விரைகிறான் விசயன்.  ஆனால் அந்த படைக்கலங்களைக் கண்டவுடனேயே அவற்றை விசயனுடைய படைக்கலங்கள் என்பதை அறிகிறான் உத்தரன்.  விசயனைப் பற்றி உத்தரன் கேட்க விசயன் வந்து போரிடுவான் என்று பதில் வருகிறது பேடியிடமிருந்து.  தைரியம் வருகிறது உத்தரனுக்கு.  தேர் ஓட்டு எனக் கட்டளை இட்டு ஆயுதங்களுடன் நிற்கிறான் பேடி.  தேரில் நிற்கும் பேடியைப் பார்த்தவுடன் துரோணர் ஐயப்படுகிறார்.  வில்பிடித்து நிற்கும் தோரணை விசயனைப் போல் உள்ளதே என ஐயுறுகிறார்.  விசயன் அம்பு எய்து பலரையும் அழிக்கிறான்.  விதுரன் இவனை நம் நிலம் பக்கம் அழைத்துப் போய் போர் செய்ய வேண்டும் என ஆலோசனை கூறுகிறார்.  வீடுமனும் அதுவே சரியான கருத்து என்று உரைக்கிறார்.  கன்னன் எல்லோரையும் பார்த்து எள்ளி நகையாடுகிறான்.  இருப்பது ஒரு தேர்.  அதிலும் நிற்பவன் ஒரு பேடி.  நாம் அச்சப்படுவதா என்று கொக்கரிக்கிறான்."தேரும் அங்கு ஒரு தேர்; தனித் தேரின்மேல் நின்று, வீர வெஞ் சிலை வளைத்த கை வீரனும் பேடி; யாரும் நெஞ்சு அழிந்து அஞ்சுவது என்கொல்?'' என்று இசைத்தான்- சூரன் மா மகன் ஆகிய சூரரில் சூரன்.  - இப்படித்தான் நம்மிடம் கூறுகிறார் வில்-யார்.  நிரைகளை கொண்டு போகும்படி தம்பியரிடம் உத்தரவிடுகிறான் துரியோதனன்.  தானும் பேடியை எதிர்க்கத் துணிகிறான்.  விசயன் அரசர்களையும் துரியோதனின் தம்பியரையும் தடுத்து ஆநிரையை மீட்கிறான்.  துரியோதனனுடன் வந்த இடையர்கள் துவள்கிறார்கள். விராட நாட்டு இடையர்கள் குதூகலத்துடன் ஆரவாரமிடுகிறார்கள்.  மறைந்து உறையும் நேரம் முடிவடைகிறது.  உடனே தன்னுருவம் மீள வேண்டுமென விசயன் நினைக்கிறான்.  உடன் காட்சி மாறுகிறது.  தேரில் விசயன் . கையில் காண்டீபம் - தேரில் விசயன் கொடி பறக்கிறது.  வேற்று உரு ஒழித்த விசயன் நாணை இழுத்து ஓசையை எழுப்புகிறான்.  பகைவர் நடுங்குகின்றனர். நாணொ- கேட்டு உத்தரன் மயக்கமடைகிறான்.  அவனைத் தேற்றி தேரை விடச் சொல்கிறான் விசயன்.  துரியோதனனை நெருங்கி விசயன் போரிடுகிறான். தப்பியோடப் பார்க்கிறான் துரியோதனன்.  அவனை இகழ்கிறான் விசயன். இதற்குள் துரோணர் வருகிறார் விசயனுடன் போரிட.  கன்னனும் வருகிறான்.  போருக்கு அழைக்கிறான்.  கன்னனும் விசயனும் இப்போது போரிடுகிறார்கள். மும்முறை தோற்று ஓடுகிறான் கண்ணன்.  அசுவத்தாமன் கன்னனை இகழ்கிறான். இருப்பது ஒரு தேர் நிற்பது ஒரு பேடி அஞ்ச வேண்டாம் என்று வீரம் பேசினாயே - ஏன் ஓடுகிறாய்.?  சொல்வது அனைவருக்கும் எளிது.  ஆனால் சாதிப்பது கடினம்.  விசயன் சாதிக்கிறான் பார்.  பல யானைகள் கூடினாலும் ஒரு சிங்கத்தை வெல்ல முடியுமா?'' என்றான்.   துரோணரும் வீடுமரும் வந்தவுடன் துரோணரைத் தொழுது, "அந்தணர் அரசே, உன்தன் அருளினால் அடவி நீங்கி வந்தனம் - உன்னோடு போர் புரிதல் தகாது'' எனக் கூறினான் விசயன்.  "மன்னொடு சூழ நின்ற மாசுணம் உயர்த்த கோவை  மின்னொடும் உரும்ஏறு என்ன வெகுண்டு அமர் புரிவது அல்லால்,  நின்னொடும், கிருபனோடும், நின் மகனோடும், முந்தை-  தன்னொடும், புரியேன், வெம் போர்; தக்கதோ? சரதம் பாவம்!'' துரோணரோ செஞ்சோற்றுக் கடனுக்காகப் போர் புரிவதாகவும் எனவே முறை நோக்கத் தேவையில்லை என்றும் கூறிப் போரிடுகிறார்.  விசயன் இப்போது கணை தொடுக்கும் திறமையைக் கண்டு "கானகம் போன பன்னிரண்டு ஆண்டுகளில் ஏராளமாகக் கற்றிருப்பான் போ-ருக்கிறது - இவன் பெய்யும் கணைமழையைப் பார்த்தால் இவனிடம் நான் பாடம் கற்க வேண்டும் போ-ருக்கிறது'' என்று பெருமைப்பட்டார்.  ஆரியத் துரோணன் புறமுதுகிட்டான்.  அடுத்து அசுவத்தாமன் பொருது அவனும் தோற்கிறான்.  கிருபன் முத-யோர் வந்து பொருது அவர்களும் தோற்கிறார்கள்.  வீடுமன், விதுரன் ஆகியோர் நாற்புறமும் சூழ்ந்து அனைத்துப் பக்கங்களி-ருந்தும் விசயனைத் தாக்குகிறார்கள்.  நேருக்கு நேர் போர் புரியாமல் அனைத்துப் பக்கங்களி-ருந்தும் தாக்கத் தொடங்கியவுடன் விசயன் மோகனக் கணையை விடுகிறான்.  அனைவரும் மயக்கமடைகிறார்கள்.  திரொளபதியின் துகிலை உரித்த போது வேடிக்கை பார்த்தவர்கள் தானே அனைவரும் என்று கருதி மற்றொரு கணை தொடுத்து அனைவரின் துகிலையும் பறிக்கிறான் விசயன்.  துரியோதனின் மகுடத்தைப் பறித்துக் கொள்கிறான் விசயன்.  வெற்றியுடன் திரும்புகிறான்.  மயக்கம் தெளிந்த அனைவரும் வெட்கமடைந்து திரும்புகிறார்கள்.  துரியோதன் பாட்டன் வீடுமனிடம் "விசயன் உரிய காலத்திற்கு முன்னர் வெளிப்பட்டான்.  இவனை மீண்டும் காடு புகச் சொல்லுங்கள்'' என்று கட்டளையிட்டான்.  அவரோ குறித்த காலம் முடிந்த பிறகே விசயன் வெளிப்பட்டான் என்பதைக் கூறினார்கள். அங்கே அரண்மனையில் விராடன் தன் மகன் தனியாக போர்ககளத்திற்குச் சென்றது கேட்டவுடனேயே மயக்கமடைகிறார்.  கங்கர் அவனைத் தேற்றி உடன் பேடி சென்றிருப்பதால் உத்தரனுக்கு ஒன்றும் நேராது என்று தேற்றுகிறார்.  இதற்குள் வெற்றிச் செய்தி எட்டுகிறது மன்னனுக்கு.  வரவேற்பு கொடுக்க ஆவன செய்யுங்கள் எனக் கூறி வரும்வரை சூதாடுவோம் என கங்கரை அழைக்கிறார்.  சூதாடும் போது மன்னர் தன் மகன் வெற்றி பற்றி பேச - கங்கர் அது பேடியின் வெற்றியே எனத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்.  சினம் கொள்கிறார் விராட மன்னர்.  கையில் இருந்த சொக்கட்டானை தர்மரை நோக்கி எறிகிறார்.  கங்கரின் நெற்றியில் அடிபட்டு குருதி கொட்டுகிறது. இக்காட்சியைக் கண்ட விரதசாரிணி திடுக்கிட்டு தன் ஆடையால் இரத்தம் கீழே சிந்தாமல் துடைக்கிறாள்.  இதற்குள் உத்தரன் வந்து தனியிடத்தில் வைத்து நடந்த விபரங்களைக் கூறுகிறான்.  மாளிகைக்குள் பணி செய்யும் அறுவர் பாண்டவரும் திரௌபதியும் எனக் கூறியவுடன் ஓடோடி வருகிறார் மன்னர்.  கங்கரிடம் மன்னிப்பு கேட்கிறார்.  வீமனும் விசயனும் வந்து அண்ணன் நெற்றியில் உள்ள காயம் பற்றி அறிகிறார்கள்.  விராட மன்னனைக் கொல்ல கையை ஓங்குகிறார்கள்.  தடுக்கிறார் தருமர்.  அருமையான புத்திமதியைச் சொல்கிறார்."ஒன்று உதவி செய்யினும், அவ் உதவி மறவாமல்,  பின்றை அவர் செய் பிழை பொறுத்திடுவர், பெரியோர்;  நன்றி பல ஆக ஒரு நவை புரிவரேனும்,  கன்றிடுவது அன்றி, முது கயவர் நினையாரே.'' என்று கூறுகிறார். விராடன் திறைப் பொருட்களை வைத்து பாண்டவரை வணங்குகிறான்.  அவனைத் தழுவிக் கொண்ட தருமர் எதிர்வரும் போரில் தங்களுக்கு படைஉதவி புரிந்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.  உத்தரனோ ஒரு படி மேலே போய் " எங்கள் படையும் நினதே உத்தரையும் விசயனுக்கு உரியவளே'' என்று திடீர் அறிவிப்பு செய்கிறான்.  விசயன் இக்கருத்தை மறுத்து "உத்தரை எனது மகன் அபிமனுக்கே உரியவள் ஆதல் வேண்டும்'' எனக் கூறுகிறான்.  தாங்கள் வெளிப்பட்ட தகவலை உறவினருக்கும் பிற மன்னருக்கும் தருமர் தூதர்கள் மூலம் தெரிவிக்கிறார்.  உடனே அபிமன் மற்றும் கண்ணன் வருகிறார்கள்.  அப்போது கண்ணனுடன் சிவேதன் என்பவன் வருகிறான்.  சிவேதன் என்பவன் விராடனின் மகன் தான்.  முன்னொரு காலத்தில் தேவலோகத்திற் போயிருந்த பொழுது ஒரு சாபத்தால் மயிலாகிவிடுகிறான். அவன் தன் தந்தையிடம் வந்த போது அவர் அடையாளம் தெரியாததால் துரத்தி விடுகிறார்.  பின்னர் அவன் பறந்து போய் சிவபிரானை நினைத்து தவம் புரிகிறான்.  அதனால் சாபவிடை பெற்று சிவபெருமானிடம் ஆயுதங்களும் கவசங்களுடம் பெறுகிறான்.  இதைக் கேட்ட விராடன் மிக்க மகிழ்கிறான். இச்சமயம் சல்-யன் அங்கு வந்து துரியோதனன் தன்னை வஞ்சனையால் ஏமாற்றி அவனுடைய துணைவனாகி ஆக்கியது குறித்துக் கூறுகிறான்.  இந்த சல்-யன் யார் என்றால் நகுலசகாதேவர்களின் மாமன்.  பின்னர் விராடன் உத்தரையை அபிமனுக்குத் திருமணம் செய்விக்கிறான்.  திருமணம் முடிந்த பிறகு பாண்டவர்கள் காளிக்குப் ப- கொடுத்து வன்னி மரத்தில் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களை மீட்டுக் கொள்ளுகிறார்கள்.  பின்னர் விராடனின் தலைநகரை ஒட்டி இருந்த உபப்பிலாவிய நகரம் சென்று அங்கு அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கின்றனர்.  இன்றைய கதையை இத்துடன் முடித்துக் கொள்வோமா?  சூர்யா: மகாபாரதம் கதை இவ்வளவு பெரிய கதையா தாத்தா?  தாத்தா: ஆமாம்டா.  நான் தலைப்புச் செய்தியைத் தான் உன்னிடம் சொல்-க் கொண்டிருக்கிறேன்.  ஆமாம் வில்-பாரதம் காவியத்தில் தலைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளவைகளைத் தொகுத்தே உனக்கு இவ்வளவு பெரிய கதையை என்னால் கொடுக்க முடிந்து விட்டது. முழு கதையையும் நீ வில்-பாரதம் நூல் வாங்கிப் படிக்க வேண்டும்.  இன்னும் பல கதைகளையும் பல தமிழ் சொற்களையும் நீ தெரிந்து கொள்ளலாம்.  சரியா.  நாளைக்குப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment