Tuesday, November 2, 2010

PASUPATHA ARROW - ARUJUNA RECEIVES FROM SHIVJI

PRAISE YOUR MOTHER TONGUE - SPEAK IN MOTHER TONGUE - PRAY IN MOTHER TONGUE


சூர்யா:  சூதாடித் தோற்று காட்டுக்குப் போகிறார்கள் ஐவரும்.  காட்டிலே என்னென்ன சாகசங்கள் புரிந்தார்கள் தாத்தா?  நிறைய கதை இருக்குமே - சொல்லுங்க.
தாத்தா: ஆமாம்.  கெட்டதிலும் நல்லது நடக்கும்.  நடக்கும் நல்லதையே நாம் ஏற்றுக் கொண்டு அதற்காகத் தான் கெடுதல் வந்தது என்று நம்மை நாமே தேற்றிக் கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும்.  அதில் வல்லவர் தான் இந்த தருமர்.  அதனால் தான் கானகத்திற்குப் போகும் போதும் அமைதியாகவே இருக்கிறார்.  வருத்தப்படவில்லை.  சரி, இன்றைய கதைக்கு வருவோம்.  இம்முறை தருமர் முனிவர் குழாம் சூழ காமிய வனம் என்னும் காட்டிற்கு வருகிறார்.  இந்தக் காமியவனம் சரசுவதி நதிதீரத்தில் இருந்தது என்று சொல்லுவார்கள்.  இங்கே தான் தௌமிய முனிவர் வழிகாட்டுத-ன்படி தருமர் சூரிய பகவானைத் துதித்து வற்றாத உணவு வழங்கும் பாத்திரத்தைப் பெறுகிறார்.  அதன் உதவியால் உடன் இருக்கும் முனிவர்களுக்கு எல்லாம் உணவு வழங்க தருமரால் முடிகிறது. துருபதன், கண்ணன் மற்றும் பிற உறவினர் அனைவரும் - நண்பர்கள் - பிற நாட்டு அரசர்கள் எல்லாம் இந்த காட்டுக்கு வந்து விசாரிக்கிறார்கள்.  துரியோதனன் மீது படையெடுக்க அனுமதி கேட்கிறார்கள்.'மரபின் வல்லியை மன்அவை ஏற்றிய குருகுலேசனை, கொற்ற வெஞ் சேனையோடு இரிய, எற்றுதும் இப்பொழுதே!' என்கிறார்கள்.  கண்ணன் வேந்தர்களின் சினத்தைத் தணிக்கிறான்.  கெடுவான் கேடு நினைத்திருக்கிறான்.  நீதி வெல்லும் என்று கண்ணன் கூறுகிறான்."வடு மனம்கொடு வஞ்சகம் செய்பவர் கெடுவர்" என்பது கேட்டு அறியீர்கொலோ? என்கிறார் கண்ணபெருமான்.  பின்னர் அன்னை, புதல்வர் முத-யோரை உறவினர் இருப்பிடங்களுக்கு அனுப்பிவிட்டு நீங்கள் மட்டும் கானகத்தில் உறையுங்கள் என்று அறிவுரை கூறுகிறார்.  அதன்படியே தருமரும் நடந்து கொள்கிறார்.  அனைவரும் தத்தம் நாடு திரும்புகிறார்கள்.  பின்னர் வியாதமுனிவர் இந்த கானகத்திற்கு வந்து பாண்டவர்களைப் பார்க்கிறார்.  ஐவரும் நடந்ததை அவரிடம் கூறி முறையிடுகின்றனர்.  அவர் அவர்களைத் தேற்றி இனி வரும் பகையை எல்லாம் வெல்ல பார்த்தன் பாசுபதம் பெறல் வேண்டும் என்று தன் கருத்தைக் கூறி நடந்ததைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறுகிறார். "பாசுபதக்  கணை வாங்கின் அல்லால்,ஆர்த்த பைங் கழலாய்! எய்தாது, அரும் பகை முடித்தல்'' "சூதாடியதைப் பற்றி எண்ண வேண்டாம்.  இப்படி ஒரு வாழ்வு மன்னருக்கு வந்ததே என்று கவலைப்பட வேண்டாம்.  ஏற்கனவே  நளன் புட்கரனோடு சூதாடித் தன் மனைவியோடு காட்டிற்குப் போன வரலாறு உள்ளது.  க-யின் கொடுமையால் மனைவிûயும் காட்டில் பிரிந்து க- நீங்கியபின் மீண்டும் இழந்த அரசைப் பெற்றான்'' என்றெல்லாம் எடுத்துக் கூறுகிறார்.
சூர்யா: அது என்ன நளன் கதை தாத்தா?
தாத்தா: அது தனிக் கதை.  தனியாகவே சொல்ல வேண்டும்.  அருமையான கதை.  மகாபாரதத்தை முடித்து விட்டு நள-தமயந்தி கதையை உனக்குத் தனியாகக் கூறுகிறேன்.  இப்போது நாம் கதைக்கு வருவோம்.  வியாதமுனிவரின் அறிவுரைப்படி அருச்சுனன் தவம்புரிய காட்டிற்குப் போகிறான்.  வடதிசை நோக்கிச் சென்ற விசயன் கைலை மலை சென்று சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் மேற்கொள்கிறான்.  பலநாள் தவத்தால் கரையானே புற்று கட்டுகிறது விசயனைச் சுற்றி.  தீக்கடவுள் பார்க்கிறார்.  இவன் நமக்கு ஏற்கனவே காண்டவவனத்தை எரித்த போது உதவி புரிந்திருக்கிறான்.  எனவே இவனைக் காப்பது தன் கடமை என்று கருதி விசயன் இருந்த இடத்தைச் சுற்றி தீவளையத்தை ஏற்படுத்தி குளிரில் இருந்தும் விலங்குகளிடமிருந்தும் காக்கிறான்.  விசயனின் தவநிலையைக் கேள்விப்படுகிறான் இந்திரன்.  மகனே என்றாலும் கடுமையான தவம் புரிந்தால் இந்திரனுக்குப் பிடிக்காது.  தன்னுடைய குருவுடன் ஆலோசித்து இவனது மனத்திண்மையைச் சோதிக்க முடிவெடுக்கிறான்.  எப்போதும் போல முதல் தேர்வு மகளிரை அனுப்பி தவத்தைக் கலைத்தல் தான்.  எனவே உருப்பசி மற்றும் பிற வானுலகப் பெண்களை அனுப்புகிறான்.  மன்மதனையும் உடன் அனுப்புகிறான். வானுலக் பெண்களின் சேட்டையும் மன்மதனின் ஐங்கணையும் விசயனின் தவத்தைக் கலைக்க முடியவில்லை.  இதற்குள் உமையம்மை தன் தோழியரிடமிருந்து கைலை மலையில் விசயனின் கடுமையான தவம் குறித்து அறிந்து ஈசனிடம் தகவலைத் தருகிறாள்.  ஈசன் தனக்கு ஏற்கனவே இந்த விடயம் தெரியும் என்று கூறி ஆடி ஆனனன் தன் மதலையர் ஆநூற்றுவர்  - மூகாசுரன் என்று ஒரு அரக்கனை ஏவி தவநிலையில் உள்ள விசயனைக் கொல்ல முயற்சிக்கிறார்கள் என்ற தகவலையும் தருகிறார்.  உடனே சிவகணங்களை வேடர்களாக உடன்வரும் படி கட்டளையிட்டு தானும் ஒரு கிராதன் போல வேடமணிந்து உமையம்மையுடன் புறப்படுகிறார்.  கணங்களோடு இறைவன் வந்து ஏனத்தின் சுவடு நோக்குகிறார்.  ஏனம் இருக்குமிடத்தைத் தெரிந்து கொண்டு அம்பை எய்கிறார்.  இதற்குள் தவம் கலைந்த விசயன் ஒரு பன்றி தன்னைக் கொல்ல வருவதைக் கண்டு அம்பு எய்கிறான். வேடர்களாக வடிவம் கொண்டுள்ள சிவகணங்கள் விசயனுடன் பூச-டுகின்றனர்.  அப்போது சிவபெருமான் "தவம்புரியும் நீ பன்றியைக் கொன்றது தகுமோ?' என்று வினவுகிறார்.  விசயனிடம் அவனது தவத்தின் நோக்கம் என்ன என்று கேட்கிறார்.  விசயனும் பதில் கூறாமல் அவர்களுடன் வாதிடுகிறான்.  உடனே வேடர் தலைவனான சிவன், "நீ ஏற்கனவே எங்கள் குல இளைஞன் வில்வித்தை பழகியதைப் பொறுக்காமல் உன் குருநாதர் துரோணரை வைத்து கட்டைவிரலைக் குரு தக்கணையாகப் பெற்று அவன் வித்தையைக் குறைத்துவிட்டாய்.  அன்று ஒரு நாள் ஒரு முனிவன் வந்து உங்கள் அரண்மனை வாயி-ல் வேடர்கள் பசுக்களை அழைத்துச் செல்கிறார்கள் என்று கூறியவுடன் வேடர்களுடன் போரிட்டு அவர்களை வீழ்த்தினாய்.  நீ சிறுவனாக இருக்கும் போதி-ருந்தே உன்னை விட மிக்கவர் இருக்கக் கூடாது என்ற செருக்குடன் உள்ளவன்.  நீ வேட்டுவ இனத்தினருக்கு பல தவறுகளை இழைத்துள்ளாய்.'' எனக் கூறி போருக்கு அழைக்கிறார்.  இருவரும் போரிடுகிறார்கள்.  விசயனது கணையால் இறைவன் அடியுண்ண - அண்டசராசரமே அடி வாங்குகிறது.  விசயன் உட்பட..  அப்போதே விசயனுக்குச் சந்தேகம்.   நம்மை எதிர்த்து ஒரு சாதாரண வேடன் போரிட முடியுமா? நாம் அம்பால் அடித்து அவர் அடிபட்டால் எனக்குமல்லவா வ-க்கிறது. என்ன என்று புரியவில்லையே என்று திகைக்கிறான்.  பின்னர் மற்போர் புரிகிறார்கள்.  சிவபெருமான் விசயனை ஆகாயத்தில் விட்டெறிகிறார்.  கீழே விழுவதற்குள் பிடித்து நிறுத்தி பின்னர் காட்சி வழங்குகிறார்.  விசயன் சிவனின் காட்சியைக் கண்டவுடன் ஆடுகிறான்.  ஓடுகிறான். துதிக்கிறான்.  வில்-யாருக்கு துதி பாட ஒரு வாய்ப்பு கிடைத்தவுடன் அழகான துதியை நமக்காக தமிழில் தருகிறார்.  அவர் கொடுத்தபடியே பார்ப்போம்.
ஆடினன், களித்தனன், அயர்ந்து நின்றனன்;
ஓடினன், குதித்தனன், உருகி மாழ்கினன்;
பாடினன், பதைத்தனன்; பவள மேனியை
நாடினன், நடுங்கினன்;-நயந்த சிந்தையான்.
'ஆதியே! அண்டமும் அனைத்துமாய் ஒளிர்
சோதியே! கொன்றைஅம் தொங்கல் மௌலியாய்!
வாதியே! மரகத வல்லியாள் ஒரு
பாதியே! பவளமாம் பரம ரூபியே!
'பை அரா அணி மணிப் பவள மேனியாய்!
செய்ய வாய் மரகதச் செல்வி பாகனே!
ஐயனே! சேவடி அடைந்தவர்க்கு எலாம்
மெய்யனே! எங்குமாய் விளங்கும் சோதியே!
'முக்கணும், நிலவு எழ முகிழ்த்த மூரலும்,
சக்கர வதனமும், தயங்கு வேணியும்,
மைக் கயல் மரகத வல்லி வாழ்வுறு
செக்கர் மெய் வடிவமும், சிறந்து வாழியே!
பின்னர் சிவபெருமான் அவன் தவத்தின் காரணத்தைக் கேட்கிறார்.  அர்ச்சுனன் பாசுபதம் வேண்டுகிறான்.  உடன் அவனுக்கு அந்தக் கணையை வழங்கி கயிலைக்கு மீளுகிறார் சிவபெருமான்.  பின்னர் இந்திரன் வந்து விசயனைத் தழுவி தன்னுடன் வானுலக்கு அழைத்துச் செல்கிறார்.  நாளைக்குத் தொடரலாம்.

No comments:

Post a Comment