Friday, June 24, 2011

‘தமிழன் என்று சொல்லடா - Songs of Boothathazhvar

‘தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா‘


அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இனிபுருகு சிந்தை இடு திரியா நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.
(தகளி-தகழி, அகல் விளக்கு, நன்பு அன்பு, ஆத்மா)
இயல், இசை மற்றும் நாடகத்திற்கு ஏற்றது தமிழ் மொழி.  இனிய மொழி.  இறைவன் விரும்பிய மொழி.  இப்படிப்பட்ட தமிழ் மொழி பயின்று வளர்ந்த பூதத்தாழ்வார் தமிழைப் பயின்றதற்காகப் பெருமைப்படுகிறார்.  தமிழை ஞானத்தமிழ் என்று ஏத்துகிறார்.  தனது அன்பு எனும் அகல்விளக்கில் ஆசை என்னும் நெய்யை இட்டு, மனத்தைத் திரியாக இட்டு உள்ளம் உருக திருமாலுக்கு ஞானச் சுடர் ஏற்றியதாகக் கூறுகிறார் ஆழ்வார்.

தமிழால் பாடல் பாடி இறைவனைத் துதிப்பதைப் பெருமையாகக் கருதியிருக்கிறார்கள் பண்டைய நாளில். பூதத்தாழ்வார் பிறிதொரு பாடலில் கூறுகிறார் பாருங்கள்.

யானே தவஞ் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவமுடையேன் எம்பெருமான் யானே
இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன்
பெருந்தமிழன் அல்லேன் பெரிது.

எம்பெருமானே ஏழ்பிறப்பும் யான் தவம் செய்தேன்.  எனவே இரு தமிழ் மாலை இணை அடிக்கே சொன்னேன்.  பெரிது நல்லேன்.  பெருந்தமிழன் நானே என்று கூறி பெருமைப்படுகிறார் பூதத்தாழ்வார்.

பூதத்தாழ்வார் வழியில் நின்று
‘தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா‘

No comments:

Post a Comment