Monday, July 25, 2011

குமரகுருபரர்-Kumaraguruparar Tamil poems


கற்க கசடற கற்று அவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்பார் திருவள்ளுவர்.  இது குறித்து குமரகுருபரர் என்ன கூறுகிறார்? பார்ப்போம்.

கற்றபின் அது போன்று நடவாதவனை என்றாவது ஒரு நாள் ஒருவன் உறுதியாகக் கேட்பான்.  “ஏனப்பா, இவ்வளவு படித்திருக்கிறாயா?  இது கூடத் தெரியாதா?  படித்துப் பட்டம் பெற்ற நீ இப்படி நடக்கக் கூடாதுஎன ஒருவன் கேட்கும் நிலை வரும்.

கற்றுப் பிறருக்கு உரைத்துத் தாம் நில்லார் வாய்ப்படூஉம்
வெற்றுரைக்க உண்டோர் வலியுடைமை- சொற்ற நீர்
நில்லாதது என்னென்று நாண் உறைப்ப நேர்ந்து ஒருவன்
சொல்லாமே சூழ்ந்து சொலர்.
(வாய்ப்படூஉம் வாயிலிருந்து வெளிப்படும், சொற்ற என்றால் சொன்ன)

இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று ஊருக்கு உபதேசம் கூறும் நீங்கள் அவ்வாறு நடக்கவில்லையே என்று கற்றவர் நாணும்படி வெளிப்படையாகவே குறிப்பாகவே யாராவது என்றாவது சொல்லத்தான் செய்வார்கள்.  எனவே பிறருக்கு உரைப்பது உபதேசம் செய்வது மிகவும் எளிதான செயல்.  அதை யாரும் செய்யலாம்.  அப்படி நடந்து காட்ட வேண்டும்.  அது தான் கற்றவனுக்கு அழகு.

No comments:

Post a Comment