Monday, July 25, 2011

குமரகுருபரர் - நீதிநெறி விளக்கம் KUMARAGURUPARAR - TAMIL POEMS,

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

ஒரு அரசன் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை நீதிநெறி விளக்கத்தில் குமரகுருபரர் மிக அழகாக விளக்குகிறார்.

மக்கள் துயர்படும் போது இன்று பெற்றுக் கொள்ளக்கூடிய வரியை நாளை பெற்றுக் கொள்ள வேண்டும்.  மக்கள் குறையைச் சொல்ல வரும்போது அவர்களை எதிர்கொண்டு குறைகளைக் கேட்க வேண்டும்.  மக்களிடம் கோபம் கொள்ளக் கூடாது.

நின்று கொளற்பால நாளைக் கொளப் பொறான்
நின்று குறையிரப்ப நேர்படான் - சென்று ஒருவன்
ஆவன கூறின் எயிறு அலைப்பான் ஆறலைக்கும்
வேடலன் வேந்தன் அல்லன்

நேர்படான் என்றால் காட்சி தராதவன்.  எதிர்கொள்ளாதவன்
எயிறு என்றால் பல்
ஆறலைத்தல் என்றால் வழிப்பறி செய்தல்



No comments:

Post a Comment