Monday, July 25, 2011

Kumaraguruparar - tamil poems /குமரகுருபரர்-நீதிநெறி விளக்கம்

ஒருவன் நன்மதிப்பை எப்படி எல்லாம் பெறலாம்?  மூன்று வழிகளைச் சொல்கிறார் குமரகுருபரர் தனது “நீதிநெறி விளக்கத்தில்”.
·          மற்றவர்களுடைய பெருமைகளை மறைக்க முயலக் கூடாது
·          மற்றவர்கள் குறையை வெளியே சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது
·          எல்லோரிடத்திலும் பணிவாக இருக்க வேண்டும்

பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும்
மறவாதே நோற்பது ஒன்று உண்டு பிறர்பிறர்
சீர் எல்லாம் தூற்றிச் சிறுமை புறங்காத்து
யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல்

பெருஞ்சுட்டு என்றால் பெருமதிப்பு
நோற்பது என்றால் கடைப்பிடிக்க வேண்டியது
புறங்காத்து என்றால் வெளியில் பரவாமல் தடுத்து

No comments:

Post a Comment