Thursday, August 18, 2011

விவேக சிந்தாமணி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு


தடாகத்தில் இருக்கும் தாமரைக்கு சூரியனும் தண்ணீரும் தந்தையும்  தாயும் போல உள்ளனர்.  இப்படிப்பட்ட தாயையோ தந்தையையோ பிரிந்தால் அழகிய அந்த தாமரையின் கதி என்ன?  தண்ணீரிலிருந்து தரைக்கு வந்தால் தந்தை போல இருக்கும் சூரியனே தகித்து காய வைத்து விடுவான்.  அந்த தாமரையையே பறித்து அதே நீரில் மீண்டும் போட்டாலும் அந்தத் தாமரை அழுகிவிடும்.  எனவே நமது நிலைக்குக் காரணமாக இருப்பவர்களுடன் ஒத்துப் போகவேண்டும்.  பகைத்தால் பாழ் நரகில் போய் விழவேண்டி வரும்.  அருமையான பாட்டின் மூலம் விவேக சிந்தாமணியில் இக்கருத்து வலியுறுத்தப்படுகிறது.


சங்கு வெண்தாமரைக்குத் தந்தை தாய் இரவி தண்ணீர்
அங்கு அதைக் கொய்து விட்டால் அழுகச் செய்து அந்நீர் கொல்லும்
துங்க வெண் கரையில் போட்டால் சூரியன் காய்ந்து கொல்வான்
தங்களின் நிலைமை கெட்டால் இப்படித் தயங்குவாரே.

தயங்குவாரே என்றால் திகைப்பாரே என்று பொருள்





No comments:

Post a Comment