Sunday, August 21, 2011

விவேகசிந்தாமணி

சங்கே முழங்கு - எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

பட்டினத்தாரின் கருத்தாழமிக்க பல பாடல்களை நாம் பார்த்தோம்.  விவேக சிந்தாமணியிலும் இக்கருத்தைக் கூறும் பாடல் ஒன்று உள்ளது.

பண்டம் பொய்க்கூரை பழகி விழுந்திடில்
உண்ட அப்பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநடவாதே

உடலை ஒரு குடிலாக - கூரையுள்ள வீடாகப் பார்க்கிறார் கவிஞர்.  அந்த வீடு விழுந்துவிட்டால் அவர் வாழ்ந்த அளவில் அவர் கடைப்பிடித்த விரதங்கள், தானதருமங்கள், அவர் பெற்ற ஞானம் ஆகியவையே அவரைப் பின்தொடர முடியும்.  அவர் உடலால் பந்தப்பட்டு அவர் உடலுடன் உறவாடிய மனைவி, மக்கள், உற்றார், உறவினர், நண்பர் யாரும் அவர் பின் செல்ல முடியாது.  அவரைத் தொடர்ந்து செல்ல முடியாது என்ற அருமையான கருத்தைச் சொல்கிறது இப்பாடல்

No comments:

Post a Comment