Monday, August 22, 2011

VIVEKA CHINTHAMANI-விவேகசிந்தாமணி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு


பல தமிழ்ச் சொற்களை நாம் மறந்து விட்டோம்.  முறையான உபயோகம் இல்லாததால் நல்ல தமிழ் சொற்கள் அழிகின்றன.  பொருள் தெரியாமல் தவிக்கிறோம்.  தினசரி நல்ல தமிழ் நூல்களில் இருந்து ஒரு பக்கமாவது நாம் படிக்க வேண்டும்.  அப்போது தான் பல தமிழ் சொற்களை நாம் கற்றுத் தெரிந்து கொள்ள முடியும்.  இன்று தாளாண்மை பற்றியும் வேளாண்மை பற்றியும் பார்ப்போம்.  அதென்ன தாளாண்மை வேளாண்மை.  தாளாளர் வேளாளர் என்ற சொல் இன்று நம்மிடையே உபயோகத்தில் உள்ளது.  அதை வைத்து புரிந்து கொள்ள முயல்வோம்.

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு

முயற்சி உடையவர்கள் தான் பிறருக்கு உதவ முடியும்.  தாளாண்மை என்றால் விடாமுயற்சி.  அப்படிப்பட்ட விடாமுயற்சி இருப்பவன் தான் பிறருக்கு உதவ முடியும்.  வேளாண்மை என்றால் பிறருக்கு உதவுதல்.  ஆமாம், வேளாண்மை செய்பவர் தான் மட்டும் உண்ணவா அவ்வளவு சிரமப்படுகிறார்.  மற்றவர்களும் உண்பதற்காகத் தானே அவர் விடாமுயற்சி செய்கிறார். 

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கேடும்.
ஒரு கோழையின் கையில் வாள் இருந்தால் என்ன நடக்கும்.  வாள் இருந்தாலும் ஓடிப்போய் விடுவான்.  அதே வாள் ஒரு வீரன் கையில் இருந்தால் எதிரிகளைப் பந்தாடி விடுவான் அவன்.  அதுபோல  முயற்சி உடையவன் தான் பிறருக்கு உதவ முடியும்.  முயற்சி அற்றவன் ஒருகாலும் பிறருக்கு உதவமுடியாது.  இது திண்ணம்.

No comments:

Post a Comment